தேர்தலை புறக்கணிக்குமாறு துண்டுபிரசுரங்கள் விநியோகித்த எம்பிக்கு பொலிஸார் இடையூறு
எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலை புறக்கணிக்குமாறு கோரி தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் நாடாளுமன்ற உறுப்பினர் செல்வராசா கஜேந்திரன் உள்ளிட்ட அணியினர் இன்று (13) கிளிநொச்சியில் (Kilinochchi) துண்டுபிரசுரங்கள் விநியோகம் செய்துள்ளனர்.
இதன்போது, குறித்த நடவடிக்கைக்கு பொலிஸார் இடையூறு விளைவித்துள்ளதுடன் துண்டுபிரசுர விநியோகத்தினை இடைநிறுத்துமாறு உத்தரவிட்டுள்ளனர்.

தேர்தலை புறக்கணிக்குமாறு பிரசார நடவடிக்கையில் ஈடுபட்ட கஜேந்திரன் அணிக்கு புதுக்குடியிருப்பு பொலிஸார் இடையூறு
தொடர் நடவடிக்கை
மேலும், பொலிஸாருக்கும் செல்வராசா கஜேந்திரன் (Selvarajah kajendran) உள்ளிட்ட அணியினருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.
அத்துடன், தேர்தலை புறக்கணிக்குமாறு கூறும் வகையிலான துண்டுபிரசுரங்களையும் பொலிஸார் பரிமுதல் செய்துள்ளனர்.
2024ஆம் ஆண்டுக்கான ஜனாதிபதித் தேர்தல் எதிர்வரும் 21ஆம் திகதி நடைபெறவுள்ள நிலையில் செல்வராசா கஜேந்திரன் உள்ளிட்ட குறித்த தரப்பினர் தொடர்ந்து தேர்தலை புறக்கணிக்குமாறு துண்டுபிரசுரங்களை விநியோகித்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |







பாக்ஸ் ஆபிஸில் படுதோல்வியடைந்த தக் லைஃப்.. இதுவரை உலகளவில் செய்துள்ள வசூல் எவ்வளவு தெரியுமா Cineulagam

எங்கள் உயிரைக் காத்த ஹீரோ அவர்: ஏர் இந்தியா விமானத்தின் விமானியை புகழும் 18 குடும்பங்கள் News Lankasri

இந்திய ரஃபேல் விமானம் பாகிஸ்தான் வீழ்த்தியதா... முதல் முறையாக பிரெஞ்சு உற்பத்தியாளர் விளக்கம் News Lankasri
