யாழ். மத்திய பேருந்து நிலையத்தில் சுகாதார நடவடிக்கை: அமைச்சர் டக்ளஸ் வலியுறுத்து
யாழ்ப்பாணம் (Jaffna) மத்திய பேருந்து நிலையத்தில் பயணிகளது நலன் கருதி சுகாதார நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு துறைசார் அதிகாரிகளுக்கு கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா (Douglas Devananda) அறிவுறுத்தியுள்ளார்.
யாழ். மாநகரசபை உத்தியோகத்தர்கள், இ.போ.ச அதிகாரிகள், பொலிஸார் மற்றும் சுகாதார பரிசோதகர்கள் உள்ளிட்ட தரப்பினருடன் அமைச்சரின் யாழ். அலுவலகத்தில் இடம்பெற்ற கலந்துரையாடலிலேயே அவர் இதனை வலியுறுத்தியுள்ளார்.
குறித்த சந்திப்பின்போது, யாழ். மத்திய பேருந்து நிலைய வளாகத்துக்குள் பொலிஸ் காவலரண் அமைத்தல் தொடர்பில் ஆராயப்பட்டதுடன் காவலரணை அமைப்பதற்கான இடவசதி உள்ளிட்ட விடயங்களை பொலிஸாருக்கு ஏற்படுத்தி கொடுக்குமாறு இ.போ.ச (SLTB) அதிகாரிகளுக்கு அமைச்சரால் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
ஆளணி பற்றாக்குறை
அத்துடன், பேருந்து நிலைய வளாகத்தில் உள்ள வியாபார கடைகளால் பயணிகளுக்கு ஏற்படும் அசௌகரியங்களை கருத்தில் கொண்டு அந்த கடைகளை அகற்றுவது தொடர்பில் நடவடிக்கை எடுக்குமாறு பணிக்கப்பட்டுள்ளது.
மேலும், பேருந்து வளாகத்தின் தூய்மை தொடர்பில் அதிக அக்கறை செலுத்தி பயணிகளின் சுகாதாரத்தை உறுதிப்படுத்துமாறும் இ.போ.ச அதிகாரிகளுக்கு இதன்போது வலியுறுத்தப்பட்டுள்ளது.
அதேவேளை, சாரதி மற்றும் நடத்துனருக்கான ஆளணி பற்றாக்குறையை நிவர்த்தி செய்வது தொடர்பிலும் குறித்த கலந்துரையாடலின் போது அவதானம் செலுத்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |

பதினாறாவது மே பதினெட்டு 1 நாள் முன்

எனது கல்விக் கட்டணம் இனப்படுகொலைக்கு செலவழிக்கப்படுகிறது: பட்டமளிப்பு விழாவில் குமுறிய மாணவி News Lankasri

ரஷ்யாவின் கேபிள் தாக்குதலை முறியடிக்க "இராஜ ட்ரோன் நீர்மூழ்கி" கப்பலை வடிவமைத்த பிரித்தானியா News Lankasri
