விசேட அதிரடிப் படையினரின் தாக்குதலில் இருவர் படுகாயம் (photos)
யாழ். தென்மராட்சி வரணிப் பிரதேசத்தில் விசேட அதிரடிப் படையினர் மேற்கொண்ட தாக்குதலில் இருவர் காயமடைந்துள்ளனர்.
இந்தச் சம்பவம் நேற்றிரவு 7.30 மணியளவில் இடம்பெற்றது என கொடிகாமம் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
சிவில் உடையில் வந்த விசேட அதிரடிப் படையினரின் துப்பாக்கிச் சூட்டில் ஒருவரும், கொட்டனால் தாக்கப்பட்டு இன்னொருவருமாக இருவர் காயமடைந்துள்ளனர்.
துப்பாக்கிச்சூட்டுக்கு இலக்கானவர் கையில் காயமடைந்த நிலையில் சாவகச்சேரி ஆதார வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டுள்ளார். சட்டவிரோத மதுபானம் விற்பனை செய்வதாகத் தெரிவித்தே தங்கள் மீது தாக்குதல் மேற்கொள்ளப்பட்டது எனத் தாக்குதலுக்குள்ளானவர்கள் தெரிவித்துள்ளனர்.
இதேவேளை, துப்பாக்கிச்சூடு மேற்கொண்ட விசேட அதிரடிப் படையினரைக் கைதுசெய்த கொடிகாமம் பொலிஸார், இன்று சாவகச்சேரி நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தியுள்ளனர்.
இந் நிலையில் சாவகச்சேரி நீதிமன்ற பதில் நீதவான் ச.இளங்கோவன் அவர்களை பிணையில் செல்ல அனுமதி வழங்கியுள்ளார்.





பிரித்தானிய வரலாற்றில் நடந்த மிகப்பெரிய கொடுமை., தாய்மார்களிடம் மன்னிப்பு கேட்ட பிரதமர் News Lankasri
சட்டவிரோதமாக வெளியான விஜய்யின் ஜனநாயகன் படத்தை இத்தனை கோடி பேர் பார்த்துள்ளார்களா?... ஷாக்கிங் தகவல் Cineulagam
போட்றா வெடிய, விஜய்யின் ஜனநாயகன் படத்திற்கு கிடைத்த தணிக்கை சான்றிதழ்... ரிலீஸிற்கு தயாரான படம் Cineulagam
நோர்ட் ஸ்ட்ரீம் எரிவாயு குழாய் வெடிக்க வைத்த உக்ரைனியர்: ஜேர்மனி எடுத்துள்ள அதிரடி முடிவு News Lankasri
குடும்பத்துடன் பிறந்தநாளை கொண்டாடியுள்ள CM விஜய்யின் அப்பா எஸ்.ஏ.சந்திரசேகர்... போட்டோஸ் இதோ Cineulagam
கணவர் Gay! திருமணத்திற்குப் பிறகு வெளிவந்த ரகசியம்: தம்பதியின் வித்தியாசமான முடிவுக்கு குவியும் பாராட்டு Manithan