அக்கரைப்பற்றில் இலஞ்சம் வாங்கிய பொலிஸ் அதிகாரி! இலஞ்ச ஊழல் பிரிவால் கைது
அக்கரைப்பற்று பகுதியில் இடம்பெற்ற ஒரு விபத்து சம்பவத்துடன் தொடர்புடைய நபரிடமிருந்து ரூ.4,000 இலஞ்சம் பெற்றதாகக் குற்றச்சாட்டில், போக்குவரத்து பொலிஸ் சாஜன் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
அக்கரைப்பற்று பொலிஸ் நிலையத்தில் பணியாற்றி வந்த போக்குவரத்து பொலிஸ் சாஜன் ஒருவரே இவ்வாறு நேற்றையதினம் (26) கைது செய்யப்பட்டுள்ளார்.
இலஞ்ச ஊழல் பிரிவால் கைது
குறித்த விபத்து தொடர்பான நடவடிக்கைகளை முடித்து தருவதாக கூறி, அந்த நபரிடமிருந்து ரூ.4,000 இலஞ்சம் கோரியதாக தெரிவிக்கப்படுகிறது. இதையடுத்து பாதிக்கப்பட்ட நபர், கொழும்பில் உள்ள இலஞ்ச ஊழல் தடுப்பு பிரிவில் முறைப்பாடு செய்துள்ளார்.

முறைப்பாட்டின் அடிப்படையில், அதிகாரிகள் வழங்கிய வழிகாட்டுதலின்படி அக்கரைப்பற்று ஆதார வைத்தியசாலை முன்பாக இலஞ்ச ஒழிப்பு பிரிவு அதிகாரிகள் மாறுவேடத்தில் கண்காணிப்பில் ஈடுபட்டனர்.
அப்போது சம்பவ இடத்திற்கு வந்த போக்குவரத்து பொலிஸ் சாஜன், இலஞ்சத் தொகையை பெற்றுக் கொண்டபோது, அங்கு மறைந்து இருந்த அதிகாரிகள் அவரை சுற்றிவளைத்து கைது செய்தனர்.
கைது செய்யப்பட்ட சந்தேகநபரை நீதிமன்றில் முன்னிலைப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
சிதைக்கப்பட்ட 10,000க்கும் மேற்பட்ட இலக்குகள்: நிலைகுலைந்து நிற்கும் ஈரான்: அமெரிக்கா தகவல் News Lankasri
ரயில் நிலையத்தில் படுத்துறங்கிய லாரி ஓட்டுநர் மகன் - RCB அணியின் நம்பிக்கை நட்சத்திரம் News Lankasri
அவ ஆரா பத்துக்கு பத்து பாடலுக்கு பிரியங்கா தேஷ்பாண்டே யாருடன் நடனம் ஆகியுள்ளார் பாருங்க.. வீடியோ இதோ Cineulagam
30 ஆண்டுகள் கழித்து உருவாகும் திரிகிரக யோகம்: ஏப்ரலில் இந்த ராசிகளுக்கு ராஜ வாழ்க்கை உறுதி! Manithan
Tamizha Tamizha: உடல் பருமனை விரும்பி திருமணம் செய்த கணவர்! நாளடைவில் கணவனால் அனுபவிக்கும் கொடுமை Manithan