நாகர்கோவில் பகுதியில் மோட்டார் குண்டுகள் செயலிழக்க வைப்பு (Photos)
பருத்தித்துறை பொலிஸ் பிரிவிற்க்கு உட்பட்ட நாகர்கோவில் பிரதேசத்திலுள்ள பகுதியில் இன்றைய தினம் (13.01.2023) பழைய மோட்டார் குண்டுகள் செயலிழக்க வைக்கப்பட்டுள்ளன.
யுத்த காலத்தில் விடுதலைப்புலிகளுக்கும் இராணுவத்திற்க்கும் முன்னரங்காக இருந்த தடுப்பு அணை பகுதியில் களப்புக்கு அருகில் பழைய மோட்டார் குண்டுகள் இருப்பது தொடர்பாக பருத்தித்துறை பொலிஸாருக்கு தகவல் வழங்கப்பட்டிருந்தது.
குண்டு செயலிழப்பு
இதனடிப்படையில் பருத்தித்துறை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி தலைமை பொலிஸ் பரிசோதகர் பிரியந்த அமரசிங்கவால் நீதின்றில் அறிக்கையிடப்பட்டு, யாழ். விசேட அதிரடிப்படை வெடி பொருட்கள் செயலிழப்பு பிரிவு ஊடாக குறித்த மோட்டார் வெடி குண்டுகள் செயலிழக்க வைக்கப்பட்டுள்ளன.