சிங்கள நடிகை தமிதாவுக்கு எதிராக வழக்குத் தொடுக்க பொலிஸார் முயற்சி
பிரபல சிங்கள திரைப்பட நடிகை தமிதா அபேரத்ன மற்றும் அவரது கணவருக்கு எதிராக வழக்குத் தொடரும் முயற்சியொன்றை பொலிஸார் முன்னெடுத்துள்ளனர்.
கொரியாவுக்கு அனுப்புவதாகக் கூறி தமிதா அபேரத்னவும் அவரது கணவரும் 30 இலட்சம் ரூபாவுக்கும் அதிகமான பணத்தை மோசடி செய்துள்ளதாக குற்றப் புலனாய்வுப் பிரிவினர் கோட்டை மஜிஸ்திரேட் நீதிமன்றத்துக்கு அறிக்கை சமர்ப்பித்தனர்.
முறைப்பாடு தொடர்பில் விசாரணைக்கு வருமாறு பொலிஸாரால் வழங்கப்பட்ட நோட்டீஸ் புறக்கணிக்கப்பட்டமையினால் நீதிமன்றில் ஆஜராகுமாறு தமிதா மற்றும் அவரது கணவருக்கு நோட்டீஸ் வழங்குமாறு குற்றப் புலனாய்வுப் பிரிவினர் நீதிமன்றத்தில் கோரிக்கை விடுத்திருந்தனர்.
கோட்டை நீதவான்
எனினும், பொலிஸாரின் அறிக்கையில் சந்தேகநபர்களாக இருவரும் பெயரிடப்படாததால் நீதிமன்றத்தால் அறிவித்தல் வழங்க முடியாது என கோட்டை நீதவான் திலின கமகே தெரிவித்தார்.
அத்துடன், உரிய முறையில் உத்தரவுகளை கோருமாறு கூறியுள்ள கோட்டை நீதவான் திலின கமகே, பொலிஸாரின் வேண்டுகோளின் பிரகாரம் நோட்டீஸ் வழங்க முற்பட்டால், எதிர்காலத்தில் வீதியில் செல்பவர்களுக்கும் நோட்டீஸ் வழங்க வேண்டும் எனவும் குறிப்பிட்டார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |

பாகிஸ்தானுக்கு பெரும் சிக்கல்.... 200 கி.மீ நீள கால்வாய்: தண்டிக்க திட்டமிடும் இந்தியா News Lankasri

வடிவேல் பாலாஜி போல் கெட்டப் போட்டு ஆளே மாறிய அவரது மகன் ஸ்ரீகாந்த்.. இதோ புகைப்படத்தை பாருங்க Cineulagam
