ரணிலின் வீட்டை தீயிட்டுக் கொளுத்திய போராட்டக்காரர்கள்: பொதுமக்களின் உதவியை நாடும் பொலிஸார்
ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் வீட்டை தீக்கிரையாக்கிய சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேக நபர்களை கைது செய்ய பொலிஸார் பொதுமக்களின் உதவியை நாடியுள்ளனர்.
இச் சம்பவம் தொடர்பில் பொலிஸார் இன்று வெளியிட்டுள்ள அறிக்கை ஒன்றிலேயே இதனை தெரிவித்திருந்தனர். அவ் அறிக்கையில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளதாவது,
”கடந்த ஜீலை 9ஆம் திகதி ரணில் விக்ரமசிங்கவின் வீடு தீ வைத்து கொளுத்தப்பட்டது.

பொலிஸ் விசாரணை
இச் சம்பவம் தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
இதேவேளை, சிசிடிவி காட்சிகளின் உதவியுடன் சம்பவம் தொடர்பிலான 14 பேரை பொலிஸார் இனங்கண்டுள்ளனர்.

பொது மக்களின் உதவி
இந்நிலையில், இனங்காணப்பட்டவர்களை கண்டுபிடிக்க பொலிஸார் பொது மக்களிடம் உதவி கோரியுள்ளனர்.
இதற்கமைய, குறித்த 14 பேரைப்பற்றி ஏதேனும் தகவல் தெரிந்தால் 0718594950, 0718594929 அல்லது 0112422176 என்ற தொலைபேசி இலக்கங்களுக்கு தொடர்பு கொள்ளுமாறு பொலிஸார் பொதுமக்களுக்கு அறிவித்தல் விடுத்துள்ளனர்.
பிரித்தானிய பள்ளியில் நடந்த கத்திக்குத்து தாக்குதல்: 14 வயது சிறுமி மீது மூன்று கொலை வழக்குப்பதிவு News Lankasri
சூரிய பெயர்ச்சியால் உருவாகும் அரிய இரட்டை ராஜயோகம் : இந்த 3 ராசிகளுக்கு டபுள் ஜாக்பாட் உறுதி! Manithan
90 வயதை தொடவிருக்கும் நடிகர் வெண்ணிற ஆடை மூர்த்தி.. தள்ளாடும் வயதிலும் எப்படி ஆரோக்கியமாக இருக்கிறார் தெரியுமா? இதோ அந்த ரகசியம் Cineulagam