இவரை தெரியுமா..! பொதுமக்களிடம் உதவி கோரும் பொலிஸார்
களுத்துறை, வாடியமங்கடை சந்திக்கு அருகில் கடந்த 14ஆம் திகதி இடம்பெற்ற துப்பாக்கிச்சூட்டு சம்பவம் தொடர்பில் தேடப்பட்டுவரும் சந்தேகநபரை கைது செய்ய பொலிஸார் பொதுமக்களின் உதவியை கோரியுள்ளனர்.
மோட்டார்சைக்கிளில் பிரவேசித்த அடையாளம் தெரியாத இருவரால் இந்த துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்டுள்ளது.
இதுவரை நடத்தப்பட்ட விசாரணைகளின் அடிப்படையில், 27 வயதுடைய சந்தேகநபர் ஒருவர் குறித்த தகவல் கிடைத்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
பொது மக்களிடம் கோரிக்கை
இந்தநிலையில் படங்களில் காணப்படும் சந்தேகநபர்கள் குறித்து ஏதேனும் தகவல் தெரிந்தால் பின்வரும் எண்களைத் தொடர்பு கொள்ளுமாறு பொதுமக்களிடம் கோரப்பட்டுள்ளது.
அதன்படி பொறுப்பதிகாரி - களுத்துறை வடக்கு பொலிஸ் நிலையம்: 071 - 8591692 மற்றும் களுத்துறை பிரிவு குற்ற விசாரணை பணியகம்: 071 - 8596395 என்ற இலக்கங்களே வழங்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

புதருக்குள் இழுத்துச் செல்லப்பட்டு... வெளிநாட்டில் டாக்ஸி சாரதியால் மீட்கப்பட்ட பிரித்தானிய மாணவி News Lankasri
விவாகரத்திற்கு ஓகே சொன்ன ரோஹினி, ஆனால் மனோஜிற்கு அவர் வைத்த செக்... சிறகடிக்க ஆசை எபிசோட் Cineulagam