முல்லைத்தீவில் உழவு இயந்திரம் விபத்து: நான்கு மாணவர்கள் காயம்
முல்லைத்தீவு - கலைமகள் வித்தியாலயத்தைச் சேர்ந்த மாணவர்கள் நான்கு பேர் உழவு இயந்திரம் குடைசாய்ந்ததில் காயமடைந்துள்ளனர்.
இந்த விபத்து சம்பவம் நேற்று (18.03.2024) இடம்பெற்றுள்ளது.
விபத்து சம்பவம்
குறித்த பாடசாலையின் மெய்வல்லுனர் போட்டிகள் இடம்பெற ஏற்பாடுகள் நடைபெற்ற நிலையில் பாடசாலை மாணவர்கள் பொருட்களை ஏற்றுவதற்காக உழவு இயந்திரத்தில் பயணித்துள்ளனர்.
இந்நிலையில் உழவு இயந்திரம் வீதியை விட்டு விலகி குடை சாய்ந்ததில் அதில் பயணம் செய்த நான்கு மாணவர்கள் காயங்களுக்கு உள்ளாகிய நிலையில் முல்லைத்தீவு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இதேவேளை காயமடைந்த மாணவர்களில் ஒருவர் யாழ். போதனா வைத்தியசாலைக்கு அனுப்பி வைக்கப்பட்ட நிலையில் வீடு திரும்பியுள்ளார்.
இவ்வாறு விபத்துக்குள்ளான உழவு இயந்திரத்தை பாடசாலை மாணவர்கள் செலுத்தினார்களா என்ற சந்தேகம் எழும் நிலையில், வடமாகாண கல்வி அமைச்சின் செயலாளருக்கு குறித்த விடயம் தொடர்பில் அறிவிக்கப்படவில்லை என்ற குற்றச்சாட்டும் எழுந்துள்ளது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |





தமிழகத்தின் சட்ட ஒழுங்கும் கட்சி அரசியலும் 6 நாட்கள் முன்

நாளை முதல்... ஐரோப்பிய ஒன்றியத்துக்கு பயணிக்கும் பிரித்தானியர்களுக்கு ஒரு முக்கிய செய்தி News Lankasri

சீனா மீது திரும்பிய ட்ரம்பின் கோபம்... ஜி ஜின்பிங் உடனான சந்திப்பு ரத்தாகும் என மிரட்டல் News Lankasri

கடையில் ஏற்பட்ட தகராறு, விட்டிற்கு வந்த மனோஜ் செய்த காரியம், அனைவரும் ஷாக்... சிறகடிக்க ஆசை அடுத்த வார புரொமோ Cineulagam

Bigg Boss 9: ஒங்க இஷ்டத்துக்கு இங்க இருக்க முடியாது.. ஆதிரையை வறுத்தெடுக்கும் விஜய் சேதுபதி- எதற்காக? Manithan
