சென்னையில் அவசரமாக தரையிறக்கப்பட்ட விமானம்
சென்னையிலிருந்து (Chennai) சிங்கப்பூர் நோக்கி புறப்பட்ட ஏர் இந்தியா விமானம் நேற்று (11) அவசரமாக சென்னை விமான நிலையத்தில் தரையிறக்கப்பட்டுள்ளது.
நடுவானில் பறந்து கொண்டிருந்தபோது தொழில்நுட்பக் கோளாறு ஏற்பட்டதை விமானிகள் உடனடியாகக் கண்டறிந்ததாக விமான நிலையத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
விமானத்தில் ஏற்பட்ட தொழில்நுட்பக் கோளாறு
இந்நிலையில், விமானிகள் உடனடியாக விமான நிலையத்துடன் தொடர்புகொண்டு சென்னை விமான நிலையத்துக்குச் செல்ல முடிவு செய்ததாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

விமானத்தில் பயணிகள் உட்பட 170 இருந்த நிலையில், விமானம் சென்னையில் பாதுகாப்பாக தரையிறக்கப்பட்டுள்ளது.
இதையடுத்து பொறியியலாளர்கள் விமானத்தில் ஏற்பட்ட தொழில்நுட்பக் கோளாறை ஆராய்ந்து வருவதோடு, கோளாறு சீர் செய்யப்பட்டதும் விமானம் மீண்டும் புறப்படும் என்று தெரிவிக்கப்பட்டது.
இந்தச் சம்பவம் பற்றி விமான நிறுவனம் விவரம் எதுவும் வெளியிடவில்லை. மற்றொரு விமானம் மூலம் பயணிகள் சிங்கப்பூருக்கு அனுப்பி வைக்கப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
டித்வா புயலின் பின் முக்கியத்துவம் பெறப்போகும் பலாலி விமான நிலையம் 15 மணி நேரம் முன்
பிரித்தானியாவில் கொல்லப்பட்ட இந்திய இளம்பெண் வழக்கு: அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ள புதிய தகவல்கள் News Lankasri
பண பிரச்சனையை தீர்த்த அண்ணாமலை, ஆனால் கடைசியில் மனோஜ்-ரோஹினிக்கு ஷாக்... சிறகடிக்க ஆசை புரொமோ Cineulagam
Bigg Boss: உன்னை மாதிரி பொறுக்கித்தனமா பண்றேன்? தைரியம் இருந்தால் துப்புடா! காருக்குள் சண்டை Manithan
விரைவில் முடிவுக்கு வரும் பூங்காற்று திரும்புமா சீரியலின் கிளைமேக்ஸ் காட்சியின் போட்டோஸ்... Cineulagam
என் வாழ்க்கையில் வில்லியாகிவிட்டீர்கள்... அம்மா குறித்து ஆர்த்தி ரவி பகிர்ந்த உருக்கமான பதிவு! Manithan