இலங்கையின் முன்னாள் கடற்படை தளபதியை கொலை செய்ய திட்டம்! மர்ம நபர்கள் வெளியிட்ட காணொளியினால் குழப்பம்
கடற்படை முன்னாள் தளபதி வசந்த கரணாகொடவை கொலை செய்ய திட்டமிட்டுள்ளதாக கிடைத்த தகவலின் அடிப்படையில் குற்றப்புலனாய்வு திணைக்களம் விசாரணைகளை ஆரம்பித்துள்ளது.
தனக்கு உயிர் அச்சுறுத்தல் விடுக்கப்பட்டுள்ளதாக வசந்த கர்ணாகொட பொலிஸ் மா அதிபரிடம் செய்த முறைப்பாட்டின் பிரகாரம், பொலிஸ் மா அதிபர் விசாரணைகளை குற்ற புலனாய்வு திணைக்களத்திடம் ஒப்படைத்துள்ளார்.
மர்ம நபர்களால் எடுக்கப்பட்ட காணொளி
வசந்த கரணாகொடவின் அனைத்து செயற்பாடுகளையும் அவதானித்து மர்ம நபர்களால் காணொளி எடுக்கப்பட்டுள்ளதாகவும் வசந்த கரணாகொட தெரிவித்துள்ளார்.
இந்த காணொளிகளை பார்க்கும் போது அவை கரணாகொடவை குறிவைத்து எடுக்கப்பட்டவை என்பது தெளிவாகியுள்ளதுடன், குற்றப்புலனாய்வு திணைக்கள அதிகாரிகள் மேற்கொண்ட விசாரணைகளின் மூலம் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
மேலும், குறித்த காணொளிகள் கரணாகொடவின் குருநாகல் வீட்டுக்கு அருகில் உள்ள சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகரின் உத்தியோகபூர்வ இல்லத்தின் ஜன்னலில் இருந்து எடுக்கப்பட்ட காணொளிகள் என்றும் தெரியவந்துள்ளது.
சந்தேகத்திற்கிடமான பல தொலைபேசி அழைப்புகள் ஊடாக விசாரணைகளை முன்னெடுத்து வரும் குற்றப் புலனாய்வு திணைக்கள அதிகாரிகள் சந்தேகத்திற்கிடமான பலரிடம் வாக்குமூலங்களைப் பெற்றுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
இந்நிலையில், மிரட்டல் குறித்து விசாரணை நடத்தி வரும் குற்றப் புலனாய்வுப் பிரிவினர் இதில் அரசியல் தலையீடு உள்ளதா என ஆராய்ந்து வருவதாக அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.இதனை கருத்திற்கொண்டு வசந்த கரணாகொடவின் பாதுகாப்பை அதிகரிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

பாகிஸ்தானுக்கு புதிய அச்சுறுத்தல்... மிக ஆபத்தான R-37M ஏவுகணைகளை சொந்தமாக்கும் இந்தியா News Lankasri

ஆயுத ஏற்றுமதியில் சாதனை படைத்த நாடு - ஜேர்மனி, இந்தியா உட்பட பல நாடுகள் முக்கிய வாடிக்கையாளர்கள் News Lankasri
