மாணவர்களை உள்ளடக்கிய பாதுகாப்பு அமைச்சின் திட்டம்: ஆசிரியர் சங்கத்தின் எதிர்ப்பு

Sri Lanka Police Ministry of Defense Sri Lanka Ceylon Teachers Service Union Sri Lankan Schools
By Erimalai Nov 12, 2023 12:00 PM GMT
Report

நாடு முழுவதும் போதைப்பொருள் கடத்தலைத் தடுக்கத் தவறிய பொலிஸாரை, பாடசாலைகளுக்குள் வரவழைத்து, மாணவர்களை உள்ளடக்கி 'புதிய சமூக புலனாய்வுப் பிரிவை' நிறுவும் பாதுகாப்பு அமைச்சின் திட்டத்திற்கு நாட்டின் முன்னணி ஆசிரியர் சங்கம் ஒன்று கடும் எதிர்ப்பை வெளியிட்டுள்ளது.

பாடசாலை அமைப்பில் போதைப்பொருள் பாவனையை தடுக்கும் உண்மையான விருப்பம் அரசாங்கத்திற்கு இருக்குமானால், நாட்டிற்குள் போதைப்பொருள் வருவதை தடுக்க பணியாற்ற வேண்டுமென இலங்கை ஆசிரியர் சங்கம் தெரிவித்துள்ளது.

வவுனியாவில் உடைப்பெடுத்த குளம்: 15 ஏக்கர் வயல் நிலங்கள் பாதிப்பு

வவுனியாவில் உடைப்பெடுத்த குளம்: 15 ஏக்கர் வயல் நிலங்கள் பாதிப்பு

“பாடசாலையில் போதைப்பொருள் பாவனையை தடுக்க அரசாங்கம் உண்மையில் எண்ணம் கொண்டிருக்குமானால், பாடசாலைக்குள் போதைப்பொருள் வருவதை தடுக்கும் திட்டத்தை உருவாக்க வேண்டும். போதைப்பொருள் பாடசாலைக்குள் வருவதை தடுக்கும் வேலைத்திட்டத்தை இதுவரை உருவாக்க முடியவில்லை.

நாட்டிற்குள் போதைப்பொருள் வருவதை தடுக்க முடியவில்லை. அதனால் தான் இந்த விடயங்கள் தொடர்பாக புதிய சட்டங்களை கொண்டு வருவதற்கும் இந்த செயற்பாடுகளை பாடசாலையின் ஊடாக மேற்கொள்வதற்கும் நாங்கள் எதிர்ப்பினை வெளியிடுகின்றோம்.”

தேசிய புலனாய்வுப் பிரிவோடு இணைந்து புதிய சமூகப் புலனாய்வுப் பிரிவொன்று ஸ்தாபிக்கப்பட்டுள்ளதாகவும் அதன் செயற்பாடுகள் ஏற்கனவே ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகவும் பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் பிரமித பண்டார தென்னகோன் தெரிவித்ததை அடுத்து, இலங்கை ஆசிரியர் சங்கத்தின் பொதுச் செயலாளர் ஜோசப் ஸ்டாலின், கொழும்பில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் இந்த விடயத்தை தெரிவித்தார்.

பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் பிரமித பண்டார தென்னகோன், ரண்டம்பே தேசிய கெடட் பயிற்சி நிலையத்தில் நடைபெற்ற தேசிய கெடட் படையின் வருடாந்த ஹெர்மன் லூஸ் மற்றும் சொய்சா சாம்பியன்ஷிப் - 2023 அணிவகுப்பில் பிரதம அதிதியாகக் கலந்துகொண்டு கருத்துத் தெரிவிக்கையில், பாடசாலைகளில் இடம்பெறும் பல்வேறு முறைகேடுகளை தடுக்க புதிய புலனாய்வு பிரிவினூடாக தேவையான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் எனக் குறிப்பிட்டிருந்தார்.

"தேசிய புலனாய்வு பிரிவு மற்றும் தேசிய சிறுவர் கெடட் கோர்ப்ஸுடன் இணைந்து சமூக புலனாய்வு பிரிவை நிறுவ தீர்மானித்துள்ளோம். அந்த திட்டத்தை இந்த வருடம் ஆரம்பித்தோம். இதற்கமைய, பாடசாலைகளில் இடம்பெறும் தவறான செயற்பாடுகள் மற்றும் போதைப்பொருள் அச்சுறுத்தல்களை குறைப்பதற்கும் அகற்றுவதற்கும், அதனை முற்றாக ஒழிப்பதற்கும் இந்த பிரிவை பயன்படுத்த முடியும். மேலும், இளைஞர்களிடம் இருந்து தேசிய வீரர்களை உருவாக்கும் தேசிய வேலைத்திட்டம் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.”

பாடசாலைகளில் போதைப்பொருள்

பாடசாலைகளில் போதைப்பொருள் பாவனை அதிகரித்தால் கல்வி அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என சிரேஷ்ட ஆசிரியர் சங்கத் தலைவர் வலியுறுத்தினார். பாடசாலைக்கு வெளியே பாதுகாப்புப் படையினர் கடமையாற்ற வேண்டும் என அவர் மேலும் சுட்டிக்காட்டினார்.

மாணவர்களை உள்ளடக்கிய பாதுகாப்பு அமைச்சின் திட்டம்: ஆசிரியர் சங்கத்தின் எதிர்ப்பு | Plan Of Ministry Of Defense Opposition Of Teachers

"பாடசாலைகளில் போதைப்பொருள் பாவனை அதிகரித்தால், கல்வி அமைச்சு தேவையான நடவடிக்கைகளை எடுக்கும். இப்போது பொலிஸாரும் பாதுகாப்புப் படையினரும் பாடசாலைக்கு வெளியே பணியாற்ற வேண்டும். அவர்கள் தேவையான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும். இவற்றை பாடசாலைக்குள் கொண்டு வருவதையும், நாட்டுக்குள் கொண்டு வருவதையும் தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்”

அரசாங்கத்தின் இந்த நடவடிக்கையின் பின்னணியில் வேறு நோக்கம் உள்ளதா என ஆசிரியர் சங்கத் தலைவர் சந்தேகம் வெளியிட்டுள்ளார்.

"பாடசாலை அமைப்பில் பொலிஸார் அல்லது இராணுவம் தலையீடு செய்யுமானால், இது முற்றிலும் கேலிக்குரியது. இது வேறு நோக்கத்திற்காக நடக்கிறது எனறே நாம் கூற வேண்டும்."

தேசிய கடற்படையுடன் இணைந்து அரசாங்கத்தினால் ஸ்தாபிக்கப்பட்ட சமூகப் புலனாய்வுப் பிரிவிற்கு இலங்கை ஆசிரியர் சங்கம் அங்கீகாரம் வழங்கியுள்ளதாக இலங்கையின் பிரதான ஆங்கிலப் பத்திரிகையொன்றின் இணையதளத்தில் வெளியிட்ட செய்தி தற்போது நீக்கப்பட்டுள்ளது.

இலங்கையில் நடைபெறவிருந்த உலகக் கோப்பை: தடையினால் பாதிக்கப்படுமா...!

இலங்கையில் நடைபெறவிருந்த உலகக் கோப்பை: தடையினால் பாதிக்கப்படுமா...!

ஜனவரி முதல் இலங்கையில் நடைமுறைக்கு வரும் வரி: அதிகரிக்கவுள்ள விலைகள்

ஜனவரி முதல் இலங்கையில் நடைமுறைக்கு வரும் வரி: அதிகரிக்கவுள்ள விலைகள்

நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW 


மரண அறிவித்தல்

நயினாதீவு 5ம் வட்டாரம், நயினாதீவு 2ம் வட்டாரம், கோண்டாவில், Toronto, Canada, Montreal, Canada, London, United Kingdom

04 Dec, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

அச்சுவேலி, யாழ்ப்பாணம், Montreal, Canada

09 Dec, 2025
மரண அறிவித்தல்

ஒட்டகப்புலம், Bremen, Germany

09 Dec, 2025
9ம் ஆண்டு நினைவஞ்சலி
2ம் ஆண்டு நினைவஞ்சலி

பூநகரி, நல்லூர்

08 Jan, 2024
9ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், யாழ்ப்பாணம், நீர்கொழும்பு, பிரான்ஸ், France

16 Dec, 2016
17ம் ஆண்டு நினைவஞ்சலி

வவுனியா, பிரான்ஸ், France

16 Dec, 2008
2ம் ஆண்டு நினைவஞ்சலி

காங்கேசன்துறை, உரும்பிராய்

16 Dec, 2023
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

அச்சுவேலி, Hatton, அவுஸ்திரேலியா, Australia

17 Nov, 2025
9ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 6ம் வட்டாரம், கனடா, Canada

15 Dec, 2020
மரண அறிவித்தல்

சுதுமலை, பண்ணாகம்

15 Dec, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

மயிலிட்டி தெற்கு, பிரான்ஸ், France

17 Dec, 2020
1ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், பிரித்தானியா, United Kingdom

15 Dec, 2024
6ம் ஆண்டு நினைவஞ்சலி

சுன்னாகம், Watford, United Kingdom

16 Dec, 2019
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, மருதனாமடம்

14 Dec, 2020
10ம் ஆண்டு நினைவஞ்சலி

கொல்லன்கலட்டி, அளவெட்டி

15 Dec, 2015
நன்றி நவிலல்

யாழ்ப்பாணம், யாழ் அச்சுவேலி தோப்பு, Jaffna, பேர்ண், Switzerland

19 Nov, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 2ம் வட்டாரம், Gossau, Switzerland

14 Nov, 2025
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 3ம் வட்டாரம், Mississauga, Canada

11 Dec, 2025
மரண அறிவித்தல்

வெள்ளவத்தை, கொல்லங்கலட்டி, Jaffna, யாழ்ப்பாணம், Markham, Canada

12 Dec, 2025
மரண அறிவித்தல்

கொழும்பு, Toronto, Canada

11 Dec, 2025
6ம் ஆண்டு நினைவஞ்சலி

பொலிகண்டி, சென்னை, India

14 Dec, 2019
மரண அறிவித்தல்

யாழ். கரவெட்டி, Hayes, United Kingdom

03 Dec, 2025
மரண அறிவித்தல்

தெல்லிப்பழை, Hannover, Germany

03 Dec, 2025
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US