உயிருடன் இருக்கும் ஒரே சாட்சியம் பிள்ளையான்! போர் வீரராக அடையாளப்படுத்தும் கம்மன்பில

Pillayan Udaya Gammanpila
By Kamal Apr 16, 2025 10:49 AM GMT
Report

கிழக்கு மாகாண முன்னாள் முதலமைச்சர் சிவனேசத்துரை சந்திரகாந்தன் எனப்படும் பிள்ளையான் ஓர் தேசிய வீரர் என முன்னாள் அமைச்சர் உதயகம்மன்பில(Udaya Gammanpila) தெரிவித்துள்ளார்.

அண்மையில் பயங்கரவாத தடை சட்டத்தின் கீழ் தடுத்து வைக்கப்பட்டுள்ள பிள்ளையானை அண்மையில் நேரில் சந்தித்து கலந்துரையாடிய கம்மன்பில இன்றைய தினம் நடத்திய ஊடக சந்திப்பில் இந்த விடயத்தை குறிப்பிட்டுள்ளார். 

என்னிடம் எதுவும் இல்லை! நித்திரை இன்றி சிறைக்குள் திணறும் பிள்ளையான்

என்னிடம் எதுவும் இல்லை! நித்திரை இன்றி சிறைக்குள் திணறும் பிள்ளையான்

சிறுவர் போராளிகள்

சிறுவர் போராளிகள் புலிகள் அமைப்பில் இருந்தனர் என்பதை பறைசாற்றக்கூடிய உயிருடன் இருக்கும் ஓர் ஆதாரமாக பிள்ளையானை நோக்குவதாக அவர் தெரிவித்துள்ளார்.

இலங்கையில் தேசப்பற்றுள்ள ஓர் தேசிய வீரராக பிள்ளையானை போற்ற வேண்டும் எனவும் கம்மன்பில குறிப்பிட்டுள்ளார். 

உயிருடன் இருக்கும் ஒரே சாட்சியம் பிள்ளையான்! போர் வீரராக அடையாளப்படுத்தும் கம்மன்பில | Pillyan Is A National Hero Udaya

தற்பொழுது சமூக ஊடகங்களில் செய்தி எழுதும் பல்வேறு இளம் தலைமுறைக்கு பிள்ளையான் யார் என்பது தெரியாது என அவர் சுட்டிக் காட்டியுள்ளார்.

தமிழீழ விடுதலை புலிகளின் தோல்வியின் ஆரம்பமே கருணா மற்றும் பிள்ளையான் ஆகியோர் தமிழீழ விடுதலை புலிகள் இயக்கத்தில் இருந்து விலகியமை என அவர் சுட்டிக்காட்டி உள்ளார்.

14 வயதில் பலவந்தமாக சிறுவர் போராளியாக பிள்ளையான் விடுதலைப்புலிகள் இயக்கத்தில் இணைத்துக்கொள்ளப்பட்டவர் எனவும் சிறுவர் போராளிகள் புலிகள் அமைப்பில் இருந்தனர் என்பதை பறைசாற்றக்கூடிய உயிருடன் இருக்கும் ஓர் ஆதாரமாக பிள்ளையானை நோக்குவதாக அவர் தெரிவித்துள்ளார்.

உயிருடன் இருக்கும் ஒரே சாட்சியம் பிள்ளையான்! போர் வீரராக அடையாளப்படுத்தும் கம்மன்பில | Pillyan Is A National Hero Udaya

பிள்ளையான் 2006 ஆம் ஆண்டு தமிழீழ விடுதலை புலிகளிடமிருந்து பிளவடைந்து ராணுவத்தில் இணைந்து யுத்த வெற்றிக்காக அர்ப்பணிப்புடன் செயல்பட்டவர் என அவர் புகழாரம் சூட்டியுள்ளார்.

மிகச் சிறந்த போர் வீரர்களாக பிள்ளையான் மற்றும் கருணாவை அடையாளப்படுத்த முடியும் என அவர் தெரிவித்துள்ளார்.

வடக்கிலிருந்து வந்த புலி போராளிகளுக்கு கிழக்கின் சூழ்நிலைகள் புரியாத காரணத்தினால் அவர்கள் தோல்வியை தழுவியதாகவும் அந்த தோல்விக்கு பிரதானமான ஓர் கருவியாக பிள்ளையான் செயல்பட்டார் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

எனவே பிள்ளையான் தொடர்பில் பிழையான தகவல்களை ஊடகங்களில் பரப்புவது ஏற்புடையது அல்ல என அவர் குறிப்பிட்டுள்ளார். 

இன்றைய தலைமுறையினர் பிள்ளையான் யார் என்பதனை புரிந்து கொள்ள வேண்டும் என அவர் தெரிவித்துள்ளார்.

உயிருடன் இருக்கும் ஒரே சாட்சியம் பிள்ளையான்! போர் வீரராக அடையாளப்படுத்தும் கம்மன்பில | Pillyan Is A National Hero Udaya

தமிழீழ விடுதலை புலிகள் இயக்கத்தில் இருந்து அவர்களுக்கு ஆதரவாக செயல்பட்ட பலர் நாடாளுமன்றில் உறுப்பினர்களாக இருக்கின்றார்கள் எனவும், புலம்பெயர் நாடுகளில் இன்னமும் அரசாங்கத்திற்கு எதிராக செயல்பட்டு வருகிறார்கள் எனவும், பல்வேறு சொத்துக்களை குவித்துள்ளனர் எனவும் சிலர் தன்னார்வ நிறுவனங்களின் பிரதான பதவிகளை வகிக்கின்றார்கள் எனவும் பிள்ளையான் கூறியதாக உதயகம்மன்பில தெரிவித்துள்ளார்.

தாம், படையினருக்கே வழங்கிய ஒத்துழைப்பு உதாசீனம் செய்யப்பட்டுள்ளதாகவும் புலிகள் தரப்பில் இருந்தவர்களை விட்டுவிட்டு புலிகளுக்கு எதிராக போர் தொடுத்த தம்மை இவ்வாறு நீண்ட காலம் துன்புறுத்துவது குறித்து மிகுந்த கவலை கொள்வதாக பிள்ளையான் கண்ணீர் விட்டு அழுதார் என உதயகம்மன்பில தெரிவித்துள்ளார். 

கருணாவால் துரத்தப்பட்ட போது மட்டக்களப்பில் மறைந்திருந்த முக்கிய புள்ளிகள்

கருணாவால் துரத்தப்பட்ட போது மட்டக்களப்பில் மறைந்திருந்த முக்கிய புள்ளிகள்

பிள்ளையானைச் சந்தித்த பின் கம்மன்பில வெளிப்படுத்திய இரகசியம்

பிள்ளையானைச் சந்தித்த பின் கம்மன்பில வெளிப்படுத்திய இரகசியம்

மரண அறிவித்தல்

Müntschemier, Switzerland, Kerzers, Switzerland

10 Mar, 2026
மரண அறிவித்தல்

Kuala Lumpur, Malaysia, நாரந்தனை, Grevenbroich, Germany

10 Mar, 2026
11ம் ஆண்டு நினைவஞ்சலி
10ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், South Croydon, United Kingdom

14 Mar, 2016
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 4ம் வட்டாரம், Le Blanc-Mesnil, France

02 Feb, 2026
நன்றி நவிலல்

காரைநகர், யாழ்ப்பாணம், புத்தளம், திருகோணமலை, கொழும்பு

13 Feb, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

புன்னாலைக்கட்டுவன் தெற்கு, Montreal, Canada

14 Mar, 2016
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

ஏழாலை மத்தி, ஏழாலை, Vejle, Denmark, Fredericia, Denmark

12 Feb, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
2ம் ஆண்டு நினைவஞ்சலி

பருத்தித்துறை, ஓமான், Oman, India, London, United Kingdom

06 Mar, 2024
25ம் ஆண்டு நினைவஞ்சலி, 6ம் ஆண்டு நினைவஞ்சலி

திருகோணமலை, உவர்மலை

14 Mar, 2001
4ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Olten, Solothum, Switzerland

26 Feb, 2022
மரண அறிவித்தல்

அச்சுவேலி தெற்கு நாவற்காடு

12 Mar, 2026
மரண அறிவித்தல்
3ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு, Langenthal, Switzerland

13 Mar, 2023
1ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

பதுளை, புங்குடுதீவு 6ம் வட்டாரம், யாழ்ப்பாணம், Paris, France

28 Feb, 2026
மரண அறிவித்தல்

உடுப்பிட்டி, Stouffville, Canada

07 Mar, 2026
மரண அறிவித்தல்

யாழ் கோண்டாவில் வடக்கு, Jaffna, Hamilton, Canada

06 Mar, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US