இந்தியாவை விட இலங்கையில் கோவிட் நோயாளர் விகிதம் அதிகம்! - பொதுச் சுகாதாரப் பரிசோதகர்கள்
இந்தியாவை விட இலங்கையில் கோவிட் தொற்று உறுதியாகின்றவர்களின் விகிதம் அதிகம் என்று பொதுச் சுகாதாரப் பரிசோதகர்கள் சங்கத்தின் செயலாளர் மஹிந்த பாலசூரிய தெரிவித்துள்ளார்.
சிங்கள ஊடகம் ஒன்றுக்குக் கருத்துத் தெரிவிக்கும்போதே அவர் இதனைக் கூறியுள்ளார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்,
"இலங்கையில் தற்போது நாளாந்தம் 1500 இற்கும் அதிகமான கோவிட் நோயாளர்கள் அடையாளம் காணப்படுகின்றார்கள்.
இந்தியாவில் நாளாந்தம் 3 இலட்சம் அளவிலானோர் கோவிட் தொற்றுக்கு உள்ளாகின்ற போதும், இந்தியாவின் மக்கள் தொகை மற்றும் இலங்கையின் மக்கள் தொகை என்பவற்றை ஒப்பிடும் போது, இலங்கையில் கோவிட் தொற்றுக்கு ஆளாகின்றவர்களின் விகிதம் அதிகமாக இருக்கின்றது.
அதேநேரம், கோவிட் நோயாளர்களுக்கான சிகிச்சையளிப்பதற்கான கட்டில்களுக்கு எதிர்காலத்தில் பற்றாக்குறை ஏற்படக்கூடும்.
தற்போது வைத்தியசாலைகளின் கொள்ளளவைக் காட்டிலும், அதிகளவான எண்ணிக்கையில்
கோவிட் நோயாளர்கள் இருக்கின்றனர். இது எதிர்காலத்தில் பெரும் நெருக்கடி நிலையை
ஏற்படுத்தும்" என குறிப்பிட்டுள்ளார்.

இந்தியாவை உலகத் தடைகளிலிருந்து ஈரான் ரகசியமாகக் காப்பாற்றியது எப்படி? பேசப்படாத பின்னணி News Lankasri

போதைப் பொருள் பிரச்சனையில் சிக்கிய ஸ்ரீகாந்திற்கு தண்டனை கிடைத்தால் இத்தனை வருடம் ஜெயிலா? Cineulagam

இந்தியாவின் கட்டுப்படியாகாத நகரம் எது தெரியுமா? பணக்காரர்களுக்கு கூட வீடு வாங்க 109 ஆண்டுகள் ஆகுமாம் News Lankasri
