சந்தை விலையை விட நான்கு மடங்கு அதிகரிக்கப்பட்டுள்ள பெட்ரோல் விலை
நாட்டில் கடுமையான பொருளாதார நெருக்கடி ஏற்பட்டுள்ள நிலையில் பொதுமக்கள் பாரிய பாதிப்பினை எதிர்நோக்கி வருகின்றனர்.
குறிப்பாக எரிபொருள் நெருக்கடி நிலை நாட்டில் கோரத் தாண்டவம் ஆடி வருகின்றது.
எரிபொருள் விலை அதிகரிப்பு, எரிபொருள் பற்றாக்குறை போன்றவற்றால் கறுப்புச் சந்தையில் எரிபொருள் விநியோகம் களைகட்டுகின்றது.

நான்கு மடங்கு அதிகரித்துள்ள விலை
இந்த நிலையில், குருநாகலில் பெட்ரேல் லீற்றர் ஒன்றின் விலை 2000 ரூபா வரை அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
தற்போது ஏற்பட்டுள்ள எரிபொருள் தட்டுப்பாட்டைப் பயன்படுத்தி சட்டவிரோதமான முறையில் எரிபொருளை பதுக்கி வைத்திருந்தவர்கள் விலையை உயர்த்தியுள்ளதாக மக்கள் தெரிவிக்கின்றனர்.
சந்தை விலையை விட நான்கு மடங்கு அதிகரித்து எரிபொருளை அநியாயமாக விற்பனை செய்வதாக மக்கள் குற்றம் சுமத்துகின்றனர்.
[G22SYS
ரிலீஸுக்கு இன்னும் 4 நாட்கள் தான்.. முன்பதிவில் ஜனநாயகன் செய்துள்ள வசூல் எவ்வளவு தெரியுமா? Cineulagam
புடின் அணு ஆயுதத் தாக்குதல் நடத்தினால்? 10 லட்சம் பேர் தப்பிக்க நிலத்தடி நகரம்..உருவாக்கிய நாடு News Lankasri