கொழும்பில் கோடீஸ்வர வர்த்தகரின் வீட்டின் மீது பெட்ரோல் குண்டு தாக்குதல்
அதுருகிரிய, கல்வருசாவ வீதியில் அமைந்துள்ள கோடீஸ்வர வர்த்தகர் ஒருவரின் வீடொன்றின் மீது பெட்ரோல் குண்டு தாக்குதல் நடத்தியுள்ளதாக நவகமுவ (Nawagamuwa) பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இந்த சம்பவம் இன்று (09) மாலை இடம்பெற்றுள்ளதாக நவகமுவ பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.
கடந்த சில மாதங்களுக்கு முன்னர், குறித்த வர்த்தகரின் வீட்டிற்கு முன்னால் மலர்வளையம் வைத்தமை தொடர்பில் பல சந்தேக நபர்கள் நவகமுவ பொலிஸாரால் கைது செய்யப்பட்டிருந்தனர்.

பாதாள உலக செயற்பாட்டாளர் அச்சுறுத்தல்
வெளிநாட்டிலுள்ள பாதாள உலக செயற்பாட்டாளர் ஒருவர் குறித்த வர்த்தகரிடம் பல தடவைகள் கப்பம் கோரியுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
இந்த பணத்தை செலுத்தாத காரணத்தினால் பெட்ரோல் குண்டு தாக்குதல் நடத்தி அவரை அச்சுறுத்தியிருக்கலாம் என சந்தேகிக்கப்படுவதாக நவகமுவ பொலிஸ் உயர் அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |
ரிஷபத்தில் செவ்வாய் பெயர்ச்சி: ஜூன் 21 முதல் இந்த 3 ராசிகளுக்கு நிதி நிலையில் அசுர வளர்ச்சி தான்! Manithan
ஈரான் ஒப்பந்தத்துக்குப் பிறகு ஹார்முஸை கடந்த முதல் 3 எண்ணெய் கப்பல்கள்., மத்திய கிழக்கில் தொடரும் பதற்றம் News Lankasri
சமந்தா கர்ப்பமாக உள்ளாரா? சமூக வலைதளங்களில் குவியும் வாழ்த்துகள்; ரசிகர்கள் மத்தியில் பரபரப்பு Manithan
தமிழன் பட பாணியில் நடைபெற்ற சம்பவம் - தமிழக அரசின் கடனை அடைக்க பணம் வழங்கிய வழக்கறிஞர் News Lankasri
ஹீரோவாக என்ட்ரி கொடுக்கும் இயக்குனர் ஷங்கர் மகன் அர்ஜித்... நாயகி, பட பெயருடன் வெளியான போட்டோ Cineulagam