வெளிநாட்டில் இருந்து இலங்கையில் விமான டிக்கெட்டுக்கு விண்ணப்பித்தவர்களை ஏமாற்றிய நபர்
இணையத்தளம் ஊடாக விமான டிக்கட் வழங்குவதாக கூறி நிதி மோசடி செய்தவரை கைது செய்வதற்கு மாத்தறை நிதி குற்ற விசாரணை பிரிவு விசாரணைகளை ஆரம்பித்துள்ளது.
பேஸ்புக்கில் ரக்கித ஹேமவர்தன என்ற பெயரில் உள்ள இந்த நபர் தொடர்பில் பொலிஸாருக்கு பல முறைப்பாடுகள் கிடைத்துள்ளன.
அவரால் இலங்கையின் பிரபல டிக்கட் விற்பனை நிலையத்தின் பெயர் பயன்படுத்தப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது..
விமான டிக்கட் வழங்குவதாக கூறி முன்னாள் அமைச்சரின் மகனிடம் சந்தேக நபர் பணம் மோசடி செய்துள்ளளார்.
முன்னாள் அமைச்சரின் செயலாளராக செயற்பட்ட இந்த நபரின் தந்தை, சகோதரர் மற்றும் சகோதரியும் இந்த மோசடியில் ஈடுபட்டுள்ளதாக விசாரணைகளில் உறுதியாகியுள்ளது.
தனது சகோதரி பணியாற்றிய நிதி நிறுவனத்திடம் பணம் செலுத்துமாறு சந்தேக நபரால் வெளிநாடுகளில் இருந்து டிக்கட்டிற்கு விண்ணப்பித்தவர்களுக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.
சந்தேக நபரினால் அவுஸ்திரேலியாவில் வாழும் நபரிடம் 4 லட்சம் ரூபாய் மோசடி செய்தமை தொடர்பில் மாத்தறை பொலிஸ் அதிகாரி விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.