புதுக்குடியிருப்பில் துவிச்சக்கரவண்டி திருட்டில் ஈடுபட்ட நபர் கைது
புதுக்குடியிருப்பு பிரதேசத்தில் துவிச்சக்கர வண்டி திருட்டில் ஈடுபட்ட நபர் இரகசிய கமராவின் உதவியுடன் பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளார்.
குறித்த கைது நடவடிக்கை இன்றைய தினம் (21.02.2024) இடம்பெற்றுள்ளது.
முல்லைத்தீவு புதுக்குடியிருப்பு பிரதேசத்தில் அண்மைய பல நாட்களாக துவிச்சக்கரவண்டி திருடப்பட்டு வந்துள்ளது.
பொலிஸாரினால் கைது
இந்நிலையில் இன்றையதினம் துவிச்சக்கரவண்டி திருட்டில் ஈடுபட்ட சந்தேகநபர் புதுக்குடியிருப்பு பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளார்.
தர்மபுரம் பகுதியை சேர்ந்த 49 வயது மதிக்கதக்க நபர் இரகசிய கமராவின் உதவியுடன் இன்று புதுக்குடியிருப்பு நகர் பகுதியில் வைத்து பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளார்.
கைது செய்யப்பட்ட குறித்த சந்தேக நபரிடம் இருந்து 6 துவிச்சக்கர வண்டிகள் மீட்கப்பட்டுள்ளன.
குறித்த நபரை நாளையதினம் முல்லைத்தீவு நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்த இருப்பதாக புதுக்குடியிருப்பு பொலிஸார் மேலும் தெரிவித்துள்ளனர்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |

பாகிஸ்தானுக்கு பெரும் சிக்கல்.... 200 கி.மீ நீள கால்வாய்: தண்டிக்க திட்டமிடும் இந்தியா News Lankasri

வடிவேல் பாலாஜி போல் கெட்டப் போட்டு ஆளே மாறிய அவரது மகன் ஸ்ரீகாந்த்.. இதோ புகைப்படத்தை பாருங்க Cineulagam

பிரித்தானியாவை நேரடியாக எச்சரிக்கும் அமெரிக்கா - லண்டனில் சூப்பர் தூதரகத்தை கட்டும் சீனா News Lankasri
