தமிழரசுக் கட்சியின் புதிய தலைவரிடம் சித்தார்த்தன் விடுத்துள்ள வேண்டுகோள்
தமிழ்த் தேசியத்தின் பலத்தை எதிர்காலத்திற்கு கொண்டு செல்ல தமிழரசுக் கட்சியின் புதிய தலைவர் வழிவகுக்க வேண்டும் என நாடாளுமன்ற உறுப்பினர் சித்தார்த்தன் வலியுறுத்தியுள்ளார்.
மேலும் கட்சிகளுக்குள்ளே காணப்படுகின்ற பிரிவானது எதிர்காலத்தில் ஏனைய கட்சிகளுக்கிடையேயான ஒற்றுமையை கொண்டுவருவதில் சிக்கல் நிலையை தோற்றுவிக்கும் எனவும் சுட்டிக்காட்டியுள்ளார்.
தமிழரசுக் கட்சியின் புதிய தலைவராக தெரிவு செய்யப்பட்டுள்ள சி. சிறீதரனுக்கு தனது வாழ்த்துக்களை தெரிவிக்கும் போதே அவர் இதனை கூறியுள்ளார்.
மேலும், தமிழரசுக் கட்சியின் தலைவர் தெரிவு மகிழ்வளித்தலும், அதற்கு முற்பட்ட காலத்தில் இடம்பெற்ற தேர்தல் பிரச்சார நடவடிக்கைகள் தமிழ் தலைமைகள் இடையே மனக்கசப்புக்களை ஏற்படுத்தியிருந்ததாகவும் தெரிவித்துள்ளார்.
இந்நிலையில் இவ்வாறான கருத்து வேறுபாடுகளை தவிர்த்து தமிழ் தேசியத்தின் ஒற்றுமையை முன்னிலைப்படுத்த புதிய தலைவர் அனைத்து கட்சிகளுடனும் இணக்கமாக செயற்பட வேண்டும் எனவும் கூறியுள்ளார்.
இதன்போது மேலும் கருத்து தெரிவித்த அவர்,
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
காந்திமதியை வீட்டைவிட்டு துரத்திய சக்திவேல், கோமதி தரமான செயல்... பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியல் Cineulagam