குரங்கம்மை அறிகுறிகளுடன் இந்தியாவிற்குள் நுழைந்துள்ள நபர்! மாநிலங்களுக்கு விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை
கனடாவிலிருந்து இந்தியா வந்த பயணி ஒருவருக்கு குரங்கம்மையின் அறிகுறிகள் அடையாளம் காணப்பட்டுள்ளது.
இதனை தொடர்ந்து குறித்த நபர் தனிமைப்படுத்தப்பட்டுள்ளதுடன், அவரிடமிருந்து ஆய்வகப் பரிசோதனைக்காக இரத்த மாதிரிகள் சேகரிக்கப்பட்டுள்ளன.
ஆய்வில், குறித்த நபருக்கு குரங்கம்மைத் தொற்று இல்லை எனவும் உறுதி செய்யப்பட்டுள்ளதுடன், அவர் எந்த விமான நிலையத்தில் வந்திறங்கினார் என்பது முதல் அந்த நபர் குறித்த எந்த விபரங்களும் வெயிடப்படவில்லை.
இந்திய மாநிலங்களுக்கு விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை
இதுவரை கனடாவிலிருந்து இந்தியா வந்தவர்களில் ஒருவர் மட்டுமே
குரங்கம்மைக்கான அறிகுறிகளுடன் வந்துள்ள நிலையில், இந்திய அரசு, சமீபத்தில்
குரங்கம்மை பாதிப்பு காணப்படும் வெளிநாடுகளுக்குச் சென்றுவிட்டு, குரங்கம்மை
அறிகுறிகளுடன் வரும் நோயாளிகள் மீது கவனம் செலுத்துமாறும், அவர்களை
தனிமைப்படுத்துமாறும் அனைத்து மாநிலங்களையும் கேட்டுக்கொண்டுள்ளது.
என்னை நிம்மதியா விடு, எதாவது பண்ணிக்க போறேன்.. சின்னமருமகள் சீரியல் நடிகை ஸ்வேதா கண்ணீர் வீடியோ Cineulagam
கவனத்தை திருப்ப முயற்சிக்கும் ரஷ்யா., உக்ரைனுக்கு 1.2 லட்சம் ட்ரோன்களை அனுப்பும் பிரித்தானியா News Lankasri