தகராறில் அயல் வீட்டு நபரின் விரலை கடித்து துண்டாக்கிய நபர்
தனிப்பட்ட தகராறு முற்றியதில் அயல் வீட்டை சேர்ந்த ஒருவரின் கைவிரல் துண்டாகும் வரை கடித்தார் எனக் கூறப்படும் ஒருவரை நேற்று கைது செய்துள்ளதாக மொறட்டுவை பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
கிடைத்த முறைப்பாட்டுக்கு அமைய சந்தேக நபர் கைது செய்யப்பட்டுள்ளதுடன் சம்பவத்தில் காயமடைந்த நபர் களுபோவில வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் கூறியுள்ளனர்.
கட்டை விரலை கடித்த சந்தேக நபர்

சந்தேக நபர், காயமடைந்த நபரின் கட்டை விரலை கடித்துள்ளார். களுபோவில வைத்தியசாலையில் விரலில் சத்திர சிகிச்சை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
காயமடைந்த நபர் தனது வீட்டில் வாகன திருத்தகம் ஒன்றை நடத்தி வருகிறார். அங்கு ஏற்படும் சத்தம் காரணமாக சந்தேக நபர் சிரமத்திற்கு உள்ளாகியுள்ளார்.
இதன் காரணமாக ஏற்பட்ட தகராறு முற்றியதில் சண்டை ஏற்பட்டுள்ளதாக ஆரம்ப விசாரணைகளில் தெரியவந்துள்ளதாக பொலிஸார் கூறியுள்ளனர்.
சம்பவம் தொடர்பாக கைது செய்யப்பட்ட நபர் மொறட்டுவை நீதவான் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட உள்ளார்.
தமிழக - இந்திய அரசியலை ஈழத் தமிழர் எப்படி எதிர்கொள்வது..! 13 மணி நேரம் முன்
எதிர்நீச்சல் தொடர்கிறது சீரியல் ரசிகர்களுக்கு சன் டிவி வெளியிட்ட குட் நியூஸ்.... என்ன தெரியுமா? Cineulagam
என் குரலைக் கேட்பது இதுவே கடைசியாக இருக்கும்... ஈரானில் அதிகரிக்கும் அரசியல் மரணதண்டனைகள் News Lankasri
கருப்பு திரைப்படத்தின் 3 நாட்கள் வசூல் விவரம்.. அதிகாரப்பூர்வமாக அறிவித்த தயாரிப்பு நிறுவனம் Cineulagam