சொத்துத் தகராறு - சகோதரியை கொடூரமாக கொலை செய்த சகோதரன்
சொத்துத் தகராறு காரணமாக ஏற்பட்ட வாக்குவாதம் முற்றி, மூத்த சகோதரியைக் கொடூரமாக கொலை செய்த சகோதரன் கைது செய்யப்பட்டதாக குளியாப்பிட்டிய பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
மேல் எலத்தலாவ திகல்ல பகுதியைச் சேர்ந்த ஒரு பிள்ளையின் தாயாரே அவரது இளைய சகோதரரால் கொல்லப்பட்டுள்ளார். சொத்து தகராறு தொடர்பான சண்டையின் பின்னர் சந்தேகநபரால் பலமுறை கத்தியால் குத்தப்பட்டதை தான் பார்த்ததாக உயிரிழந்தவரின் மருமகள் பொலிஸில் வாக்குமூலம் அளித்துள்ளார்.
மருமகளின் சாட்சியங்களின் அடிப்படையில், சந்தேகத்தின் பேரில் இறந்தவரின் இளைய சகோதரனை பொலிஸார் கைது செய்துள்ளனர், மேலும் விசாரணையின் பின்னர் அவர் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட உள்ளார்.
இரு குடும்பங்களுக்கு இடையே தொடர்ந்து மோதல்கள்
உயிரிழந்தவரும், அவரின் இளைய சகோதரரும் அருகில் வசித்து வந்ததாகவும், சொத்துத் தகராறு காரணமாக இரு குடும்பங்களுக்கு இடையே தொடர்ந்து மோதல்கள் ஏற்பட்டு வருவதாக அப்பகுதி மக்கள் தெரிவித்தனர்.
குளியாப்பிட்டிய பிரிவுக்கு பொறுப்பான சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் நெரஞ்சன் அபயவர்தன மற்றும் உதவி பொலிஸ் அத்தியட்சகர் சமன் திஸாநாயக்க ஆகியோரின் ஆலோசனையின் பேரில் குளியாப்பிட்டிய தலைமையக பிரதான பொலிஸ் பரிசோதகர் ஜயவீர ராஜபக்ஷ விசாரணைகளை முன்னெடுத்துள்ளார்.

ஒரு தீவு இரு நினைவு நாட்கள் 4 நாட்கள் முன்

சாம்சங்கில் அதிக சம்பளம் வாங்கும் வேலையை விட்டுவிட்டு.., UPSC தேர்வில் வெற்றி பெற்ற நபர் யார்? News Lankasri

இந்தியாவிற்கு எதிராக பாகிஸ்தான் பயன்படுத்திய ஆயுதங்கள்... பதிலளிக்க மறுத்த சீன இராணுவம் News Lankasri

டிஆர்பி முதல் இடத்தை பிடித்த ஹிட் சீரியல், கீழ் இறங்கிய சிங்கப்பெண்ணே.. டாப் 5 சீரியல்களின் விவரம் Cineulagam
