இலங்கையில் சினோவாக் தடுப்பூசியை பயன்படுத்த அனுமதி
இலங்கையில், சீன உற்பத்தியான சினோவக் தடுப்பூசியை அவசர தேவைகளுக்காக பயன்படுத்துவதற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
தேசிய ஒளடதங்கள் ஒழுங்குபடுத்தல் அதிகாரசபையினால் இந்த அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
அவசர தேவைகளுக்காக சீனாவின் சினோவக் தடுப்பூசியை பயன்படுத்துவதற்கு ஏற்கனவே உலக சுகாதார ஸ்தாபனம் அனுமதி வழங்கியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
சினோவக் தடுப்பூசியை எளிதில் களஞ்சியப்படுத்தி வைக்க முடியும் என தெரிவிக்கப்படுகின்றது.
18 வயதுக்கும் மேற்பட்டவர்கள் அவசர தேவைகளுக்காக இந்த தடுப்பூசியை பெற்றுக்கொள்ள முடியும் என உலக சுகாதார ஸ்தாபனம் அறிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.