கரைதுறைப்பற்று பிரதேசசபை அமர்வில் ஊடகவியலாளர்களுக்கு அனுமதி மறுப்பு.. விடுக்கப்பட்ட அறிவித்தல்
கரைதுறைப்பற்று பிரதேசசபை அமர்வுக்கு செய்தி சேகரிக்க சென்ற ஊடகவியலாளரை அனுமதி பெற்று உள்ளே வருமாறு கூறி பிரதேசசபை தவிசாளர் திருப்பி அனுப்பியதாக தெரிவிக்கப்படுகின்றது.
முல்லைத்தீவு - கரைதுறைப்பற்று பிரதேசசபை அமர்வானது நேற்று (18.09.2025) இடம்பெற்றது.
இந்நிலையில் குறித்த அமர்வினை செய்தி சேகரிக்க ஊடகவியலாளர் சென்றபோது அனுமதி பெற்றே செய்தி சேகரிக்க வரவேண்டும் என பிரதேசசபை தவிசாளர் திருப்பி அனுப்பியுள்ளார்.
அனுமதி கடிதம்..
அதனையடுத்து உடனடியாக அனுமதி கடிதத்தினை ஊடகவியலாளர் எழுதி வழங்கிய போது இப்போது கடிதம் வழங்கினால் உடனே ஆயத்தம் செய்ய முடியாது என தெரிவிக்கப்பட்டுள்ளது.
அத்துடன், இரண்டு நாட்களுக்கு முன்னரே அனுமதி பெற கடிதம் வழங்க வேண்டும் என கரைதுறைப்பற்று பிரதேசசபை தவிசாளார் சின்னராசா லோகேஸ்வரன், பிரதேசசபை செயலாளர் இராஜயோகினி ஜெயக்குமார் கூறி திருப்பியனுப்பியுள்ளனர்.
சில உள்ளூராட்சி சபைகளில் சபை அமர்வினை நேரலை ஒலிபரப்பு மேற்கொள்ளுகிறார்கள். அப்படி இருக்கும்போது கரைதுறைப்பற்று பிரதேச சபையில் செய்தி சேகரிக்க அனுமதி மறுக்கப்பட்டமையானது உள்நோக்கம் ஏதோ இருப்பதாகவே கருத தோன்றுகின்றது என குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |





மனிதகுலத்தை கட்டுப்படுத்தப்போகும் AI: 2026ஆம் ஆண்டுக்கான பாபா வங்காவின் அதிரவைக்கும் கணிப்புகள் News Lankasri
