இந்திய கடற்றொழிலாளர்கள் 7 பேருக்கு விளக்கமறியல் நீடிப்பு
நெடுந்தீவு கடற்பரப்பில் கடந்த மாதம் 13ஆம் திகதி கைது செய்யப்பட்ட 07 இராமேஸ்வரம் கடற்றொழிலாளர்களையும் 24ஆம் திகதிவரை விளக்கமறியலில் வைக்க யாழ்ப்பாணம் - ஊர்காவற்றுறை நீதவான் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.
இலங்கை கடற்பரப்பில் அத்துமீறி நுழைந்து கடற்றொழில் நடவடிக்கையில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் கடந்த மாதம் ஓகஸ்ட் 13 ஆம் திகதி நெடுந்தீவு அருகே கைது செய்யப்பட்ட 07 தமிழக கடற்றொழிலாளர்களும் இன்று(18) யாழ். ஊர்காவற்றுறை நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்டனர்.
விளக்கமறியல் நீடிப்பு
இதன்போதே இவர்களது விளக்கமறியல் மேலும் நீடிக்கப்பட்டுள்ளது.
இவர்கள் கடந்தமாதம் 20 ஆம் திகதி நீதிமன்ற உத்தரவின்பேரில் வழக்கு விசாரணைக்காக நீதிமன்றில் முன்னிலைப் படுத்தப்பட்டபோது 03.09.2025வரை விளக்கமறியலில் வைக்க நீதவான் உத்தரவிட்டிருந்த நிலையில் அன்றையதினம் வழக்கினை எடுத்துக்கொண்ட நீதவான் நேற்றுவரை (17) விளக்கமறியல் நீடிக்குமாறு உத்தரவு பிறப்பித்தார்.
நேற்று நீதிமன்றத்தில் முன்னிலைப் படுத்தப்பட்டவேளை இன்றுவரை விளக்கமறியல் நீடிக்கப்பட்டது.
மீண்டும் இன்று வழக்கு விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டபோது 7கடற்றொழிலாளர்களது விளக்கமறியலை 24ஆம் திகதிவரை நீடித்து நீதவான் உத்தரவை பிறப்பித்தார்.





16 ஆண்டுகால ஐ.நா மைய அரசியல்: பெற்றவை? பெறாதவை...... 22 மணி நேரம் முன்

அமெரிக்காவை உலுக்கிய படுகொலையில் உக்ரைனுக்கு பங்கா? எம்.பி ஒருவரின் பேச்சால் அதிர்ச்சி News Lankasri
