தமிழர்களின் கட்டட கலையை உலகிற்கு பறைசாற்றும் மந்திரிமனை! முற்றாக இடிந்துவிழும் அபாயம்
யாழ்ப்பாணத்தில் பெய்த மழை காரணமாக தொல்பொருள் சின்னமான மந்திரி மனையின் ஒரு பக்கம் இடிந்து விழுந்துள்ளது.
யாழ்ப்பாணம் இராசதானியை ஆண்ட சங்கிலிய மன்னனது மந்திரிமனை நல்லூரில் சட்டநாதர் சிவன் ஆலயத்துக்கு அருகில் அமைந்துள்ளது.
அந்தக் கட்டடம் உடைந்து விழும் நிலையில் காணப்பட்டது. கம்பிகள் திருட்டு போன நிலையில் அதனை அடுத்து அதற்கு முட்டுக்கொடுத்து கம்பிகள் நடப்பட்டிருந்த நிலையில் அவை திருட்டு போனதால் குறித்த பகுதி இடிந்து விழுந்துள்ளது.
அதேவேளை மந்திரி மனையானது தனிநபர் ஒருவருக்கு சொந்தமானது என்பதனால், அதனை தொல்லியல் திணைக்களம் முழுமையான கட்டுப்பாட்டுக்குள் எடுத்து புனரமைப்பு பணிகளை முன்னெடுக்க முடியவில்லை எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தமிழர்களின் கட்டட கலையை உலகிற்கு பறைசாற்றும் வகையில் தனித்துவமாக அமைந்துள்ள மந்திரி மனையின் முழுமையான வரலாற்றை அறிய கீழுள்ள காணொளியை காண்க...

யாழின் அத்திப்பட்டி கிராமம்! 35 வருடங்களின் பின் அம்பலமாகும் உண்மைகள் - கிணற்றுக்குள் மனிதப்புதைகுழி



