யாழிற்கு விஜயம் மேற்கொண்ட ஐ.நா சபையின் நிரந்தர வதிவிடப் பிரதிநிதி
ஐக்கிய நாடுகள் (UN) சபையின் நிரந்தர வதிவிடப் பிரதிநிதி மார்க் ஆண்ட்ரே பிராஞ் (Marc-André Franche) யாழ்ப்பாண (Jaffna) மாவட்டத்திற்கு விஜயம் ஒன்றை மேற்கொண்டுள்ளதுடன் பல்வேறு சந்திப்புக்களிலும் ஈடுபட்டுள்ளார்.
குறித்த விஜயமானது நேற்று (02.06.2024) இடம்பெற்றுள்ளது.
பாராட்டுக்கள்
இதன்போது, நல்லை ஆதீனத்திற்குச் சென்ற ஐ.நா.வதிவிடப்பிரதிநிதி ஆதீன குரு முதல்வர் ஸ்ரீலஸ்ரீ சோமசுந்தர பரம்மாச்சார்ய சுவாமிகளை சந்தித்து ஆசிபெற்றதுடன் நல்லூர் கந்தசுவாமி கோவிலிலும் வழிபாடுகளில் ஈடுபட்டார்.
இதன் பின்னர் யாழ்ப்பாணம் பொது நூலகத்திற்கு விஜயம் செய்து அங்கு கலந்துரையாடல்களை மேற்கொண்டார்.
இந்த சந்திப்பில் இந்தியா – இலங்கைக்கு இடையேயான பாக்கு நீரிணையை நீந்திக் கடந்த சிறுவன் தன்வந்தைச் சந்தித்த ஐ.நாவின் வதிவிடப் பிரதிநிதி தனது பாராட்டுக்களை தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |



ஈழத் தமிழர் இனி செய்யவேண்டியது என்ன! 2 மணி நேரம் முன்

பெட்ரோல் நிலையத்தில் உள்ள கழிப்பறைகள் பொது மக்களின் பயன்பாட்டிற்கு அல்ல.., நீதிமன்றம் உத்தரவு News Lankasri

ஈரான் விடுத்த மிரட்டல்... கத்தார் தளத்தில் இருந்து மொத்த போர் விமானங்களையும் வெளியேற்றிய அமெரிக்கா News Lankasri
