வவுனியா விபுலானந்தா கல்லூரிக்கு நிரந்தர அதிபர் நியமனம்
வவுனியாவின் முன்னனிப் பாடசாலைகளில் ஒன்றாகிய விபுலானந்தா கல்லூரிக்கு நிரந்தர அதிபர் இன்று (20) நியமிக்கப்பட்டுள்ளார்.
வவுனியா, விபுலானந்தா கல்லூரியில் பதில் அதிபராக கடமையாற்றி வந்த மோகனதாஸ் ஞானமதி என்பவர், முன்னர் கல்லூரியின் அதிபராக கடமையாற்றிய சிவநாதன் ஓய்வு பெற்ற 29.09.2023 தொடக்கம் இன்று வரை பதில் அதிபராக கடமையாற்றி வருகின்றார்.
2000 இற்கும் மேற்பட்ட மாணவர்கள்
அன்று தொடக்கம் இன்று வரை குறித்த பதில் அதிபரையே நிரந்தர அதிபராக நியமிக்குமாறு பல்வேறு தரப்பினராலும் கோரிக்கைகள் முன்வைக்கப்பட்டன.
சுமார் 2000 இற்கும் மேற்பட்ட மாணவர்கள் கல்வி கற்கும் குறித்த பாடசாலைக்கான அதிபர் நியமனம் தொடர்பில் இரண்டு நேர்முகத் தேர்வுகள் இடம்பெற்றிருந்தன.
குறித்த நேர்முகத் தேர்வில் பதில் அதிபரும் கலந்து கொண்ட போதும் இதுவரை எவரும் நிரந்தர அதிபராக நியமிக்கப்படாமல் இருந்த நிலையிலேயே தற்போது நிரந்தர அதிபர் நியமிக்கப்பட்டுளளார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
