கனடாவின் முக்கிய நகரத்தை விட்டு வெளியேறும் மக்கள்
கனடாவின் (Canada) ரொறன்ரோ நகரை விட்டு பலர் வெளியேற முயற்சிப்பதாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
ரொறன்ரோ பெரும்பாக பகுதியில் வாழும் மக்கள் அங்கு வீடு கொள்வனவு செய்வதில் நிலவி வரும் சிரமங்கள் காரணமாக இந்த தீர்மானத்தை எடுத்துள்ளனர்.
சுமார் 900 கனேடியர்களிடம் முன்னெடுக்கப்பட்ட கருத்து கணிப்பு மூலம் இந்த விடயம் தெரியவந்துள்ளது.
தொழில் வாய்ப்பு
கொள்வனவு இயலுமையைக் கொண்ட நகரங்களில் வீடு கொள்வனவு செய்ய ரொறன்ரோ நகரவாசிகள் முயற்சிப்பதாக தெரிவிக்கப்படுகிறது.
இந்நிலையில் வீடுகளை கொள்வனவு செய்யக்கூடிய நகரங்களில் தொழில் வாய்ப்பையும் பெற்றுக் கொள்வதற்கு அல்லது தொலைவில் இருந்து பணியாற்றக்கூடிய தொழில்களை பெற்றுக் கொள்வதற்கும் மக்கள் முயற்சிப்பதாக கூறப்படுகின்றது.
மேலும், வீடுகள் குறைந்த விலையில் காணப்படும் நகரங்கள் நோக்கி ரொறன்ரோ மக்கள் நகர்வதற்கான முயற்சிகளை முன்னெடுத்து வருவதோடு, மிகவும் செலவு கூடிய நகரங்களில் இருந்து செலவு குறைந்த நகரங்கள் நோக்கி நகர்வதற்கான முயற்சிகள் எடுக்கப்பட்டு வருவதாக குறிப்பிடப்படுகிறது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |





6 ஆண்டுகால ஐ.நா மைய அரசியல்: பெற்றவை? பெறாதவை...... 2 மணி நேரம் முன்

சித்திரவதை செய்யப்பட்டு கடலில் தூக்கி எறியப்பட்ட புலம்பெயர்ந்தோர்: அதிரவைக்கும் ஒரு செய்தி News Lankasri

7ஆம் அறிவு படத்தில் வில்லனாக நடித்த இந்த நடிகரை நினைவிருக்கிறதா? இப்போது எப்படி இருக்கிறார் தெரியுமா, இதோ பாருங்க Cineulagam

உலகின் சக்தி வாய்ந்த கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணைகள் - முதலிடத்தில் உள்ள நாடு எது? News Lankasri

பிரித்தானியாவில் ட்ரம்பின் வரலாற்று சிறப்புமிக்க பயணம்: கேட்டைப் பார்த்து அவர் கூறிய வார்த்தை News Lankasri
