முல்லைத்தீவு நகரை நோக்கி படையெடுக்கும் மக்கள்
நாடளாவிய ரீதியில் அமுல்படுத்தப்பட்டிருந்த பயணத்தடை இன்றைய தினம் நீக்கப்பட்டதை அடுத்த முல்லைத்தீவு நகரில் அதிகமான மக்கள் நடமாட்டம் காணப்பட்டதாக அப்பகுதியில் இருக்கும் எமது செய்தியாளர் தெரிவித்துள்ளார்.
நாடு பூராகவும் அமுல்படுத்தப்பட்ட பயணத்தடை சுமார் ஒரு மாதத்தின் பின்னர் இன்று அதிகாலை தளர்த்தப்பட்டது.
அந்த வகையில் முல்லைத்தீவு நகரில் அனைத்து வியாபார நிலையங்களும் திறக்கப்பட்டு வியாபார நடவடிக்கைகள் வேகமாக இடம்பெற்று வருவதை அவதானிக்க முடிகின்றது.
அத்தோடு மக்களின் நடமாட்டம் அதிகரித்துள்ளதன் காரணமாக சுகாதார நடைமுறைகளை கண்கானிப்பதற்காக அதிகமான பொலிஸார் மற்றும் இராணுவத்தினர் கடமையில் ஈடுபட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.