வவுனியாவில் அநுரவை பார்ப்பதற்கு அலைமோதிய மக்கள்
வவுனியாவில்(Vavuniya) இடம்பெற்ற தேர்தல் பரப்புரைக் கூட்டத்தில் ஜனாதிபதி அநுரகுமார திசாநாநாயக்கவை சந்திப்பதற்கு மக்கள் அலை மோதியுள்ளனர்.
வவுனியா மாநகர சபை உள்ளிட்ட 5 உள்ளூராட்சி மன்றங்களிலும் போட்டியிடும் தேசிய மக்கள் சக்தியின் வேட்பாளர்களை வெற்றி பெறச் செய்வதற்கான பிரசாரக் கூட்டம் வவுனியா மாநகரசபை மைதானத்தில் நேற்று (26) மாலை இடம்பெற்றுள்ளது.
வவுனியாவின் பல்வேறு பகுதிகளிலும் இருந்து அதிகளவிலான மக்கள் குறித்த கூட்டத்திற்கு அழைத்து வரப்பட்டிருந்தனர்.
விசேட அதிதியாக ஜனாதிபதி
இதில் விசேட அதிதியாக ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க கலந்து கொண்டு உரையாற்றியதுடன், வேட்பாளர்கள், பொது மக்களுடனும் கலந்துரையாடியிருந்தார்.
இதன்போது பொதுமக்கள் ஜனாதிபதிக்கு கைகொடுத்து செல்பி எடுப்பதற்கு முண்டியடித்துக் கொண்டிருந்ததையும் அவதானிக்க முடிந்ததாக எமது செய்தியாளர் குறிப்பிட்டுள்ளார்.
இதில் பிரதி அமைச்சர் உபாலி சமரசிங்க, வன்னி நாடாளுமன்ற உறுப்பினர்களான ம.ஜெகதீஸ்வரன், செ.திலகநாதன், வேட்பாளர்கள், மதகுருமார், ஆதரவாளர்கள் எனப் பலரும் கலந்து கொண்டனர்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |






காவேரியின் கர்ப்பத்தை விஜய் அறியும் உணர்வு பூர்வமான தருணம்.. மகாநதி சீரியல் எமோஷ்னல் புரொமோ Cineulagam

மகளை திருமணம் செய்து கொடுத்து விட்டு ராதிகாவுடன் கூட்டு சேர்ந்த பாக்கியா- மீண்டும் வருவாரா? Manithan
