முழு இலங்கையும் நிராகரித்த வைத்தியர் ஷாபியின் மகளின் வியக்க வைக்கும் சாதனை!  மனமுடைந்த ஆசான்

Kurunegala Sri Lanka G.C.E.(A/L) Examination Education Doctors
By Rukshy Apr 27, 2025 09:30 AM GMT
Report

ஏப்ரல் 21 தாக்குதலின் பின்னர் அதிகம் பேசப்பட்ட, குருநாகல் போதனா வைத்தியசாலையின் மகப்பேறு மற்றும் பெண் நோயியல் பிரிவின் விசேட வைத்தியர் தான் ஷாபி ஷிஹாப்தீன்.

வைத்தியர் ஷாபி ஷிஹாப்தீன் இந்த பெயரை அறியாதவர்கள் யாரும் இல்லை என்றே கூறலாம்.

கணிதத்துறையில் யாழ். ஹாட்லி கல்லூரியின் சாதனை

கணிதத்துறையில் யாழ். ஹாட்லி கல்லூரியின் சாதனை

பெண்களின் அனுமதியின்றி கருத்தடை செய்ததாக..

குருநாகல் போதனா வைத்தியசாலையில் மகப்பேறு மற்றும் மகப்பேறியல் தொடர்பான சிரேஷ்ட அதிகாரியாக பணியாற்றிக் கொண்டிருந்த இவர் சில அரசியல்வாதிகளாலும் ஊடகங்களாலும் பொய்யான குற்றச்சாட்டுகளுக்கு உள்ளாகினார்.

வைத்தியர் ஷாபி பெண்களின் அனுமதியின்றி கருத்தடை செய்ததாகக் கூறப்படும் குற்றச்சாட்டின் பேரில் கைது செய்யப்பட்டார்.

அத்துடன் சிஹாப்தீன் சட்டவிரோதமான முறையில் சொத்துக் குவித்ததாகவும், பயங்கரவாத அமைப்புடன் தொடர்புகளைப் பேணி வந்ததாகவும் குற்றம் சாட்டப்பட்டது.

முழு இலங்கையும் நிராகரித்த வைத்தியர் ஷாபியின் மகளின் வியக்க வைக்கும் சாதனை!  மனமுடைந்த ஆசான் | Dr Shafi Shihabdeen Once Again Talk Of The Media

இது ஒருபுறம் இருக்க அனுராதபுரத்தில் வைத்தியர் ஷாபி ஷிஹாப்தீனுக்கு சொந்தமானது என கூறப்படும் வீடொன்றினுள் இருந்து கடந்த வருடம் மர்மான முறையில் உயிரிழந்த ஒருவரின் சடலம் மீட்கப்பட்டது.

கலவெவ, பலலுவெவ பிரதேசத்திலுள்ள வீடொன்றிலேயே சடலம் மீட்கப்பட்டதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். கல்கிரியாகம பொலிஸ் நிலையத்திற்கு கிடைத்த தகவலுக்கமைய, மொஹமட் அஸ்கர் மொஹமட் நிதாம் என்ற 58 வயதுடையவரே, உயிரிழந்துள்ளதாக தெரியவந்தது.

இவ்வாறாக குற்றச்சாட்டுக்கள் மேல் குற்றச்சாட்டுக்கள் அவர் மீது முன்வைக்கப்பட்டிருந்தன.

தொடர் குற்றச்சாட்டுக்களின் பின்னணியில் 

இந்நிலையில், வைத்தியர் ஷாபி சிஹாப்தீன் தன் மீதான கைது தொடர்பில் பாதுகாப்பு அமைச்சில் முறைப்பாடு ஒன்றை மேற்கொண்டார்.

முறைப்பாடு அளித்த பின் அவர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையில், கடந்த 5 வருட விசாரணையின் போது தானும் தனது மனைவியும் பல முறைப்பாடுகளை தாக்கல் செய்திருந்தோம். ஆனால் அதற்கான நீதி கிடைக்கவில்லை.

முழு இலங்கையும் நிராகரித்த வைத்தியர் ஷாபியின் மகளின் வியக்க வைக்கும் சாதனை!  மனமுடைந்த ஆசான் | Dr Shafi Shihabdeen Once Again Talk Of The Media

தனக்கு ஏற்பட்ட அநீதிக்கு காரணமானவர்கள் சட்டத்தின் முன் நிறுத்தப்படுவதை உறுதி செய்வதற்காகவே முறைப்பாடளித்தேன். அரசியல் நோக்கத்திற்காகவும் இனங்களுக்கு இடையில் முறுகலை ஏற்படுத்தும் நோக்கிலும் தன் மீது பொய்யான குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டன.

எதிர்காலத்தில் இவ்வாறான சம்பவங்கள் இடம்பெறாமல் இருப்பதற்காகவே முறைப்பாடு செய்தேன் என்று அவர் குறிப்பிட்டார்.

இந்த தொடர் குற்றச்சாட்டுக்களின் பின்னணியில் விசேட வைத்திய நிபுணர் ஷாபி சிஹாப்தீன், அவர் மீது சுமத்தப்பட்ட சகல குற்றச்சாட்டுகளில் இருந்தும் குருநாகல் நீதவான் நீதிமன்ற கடந்த வருடம் நவம்பர் மாதம் அவரை விடுவித்து தீர்ப்பளித்தது.

வைத்தியர் ஷாபியின் மகள் 

இந்நிலையில் தற்போது உயர்தர பரீட்சை பெறுபேறுகள் வெளியாகிய நிலையில் வைத்தியர் ஷாபி ஷிஹாப்தீன் மீண்டும் பேசு பொருளாக மாறியுள்ளார்.

Bandara Thilakarathna என்பவர் தனது முக நூலில் வைத்தியர் ஷாபியின் மகளை பற்றி ஒரு பதிவை வெளியிட்டுள்ளார்.

”அதில் இந்த மருத்துவரைப் பற்றி நான் அதிகம் சொல்ல வேண்டியதில்லை. அவர் செய்யாத குற்றத்திற்காக கைவிலங்குகளுடன் அழைத்துச் செல்லப்பட்டார்.

முழு இலங்கையும் நிராகரித்த வைத்தியர் ஷாபியின் மகளின் வியக்க வைக்கும் சாதனை!  மனமுடைந்த ஆசான் | Dr Shafi Shihabdeen Once Again Talk Of The Media

அந்த நேரத்தில் பலர் இந்த சிறைவாசத்தை ஆமோதித்தனர். ஆனால் இதயம் உடைந்த ஒரு சிலரில் நானும் ஒருவன்.

குற்றவாளி என்று முத்திரை குத்தப்பட்ட இந்த மருத்துவரின் மகள் Zainab Shafi நான் அப்போது பணிபுரிந்த மலியதேவ பாடசாலையில் மாணவியாக உதவியற்ற நிலையில் இருந்தபோது என் இதயம் மிகவும் கவலை அடைந்தது.

நான் அதைப் பற்றி ஃபேஸ்புக்கில் எழுதினேன். Zainab Shafi ஒன்பதாம் வகுப்பு படித்துக் கொண்டிருந்தாள். அவள் தந்தை செய்யாத குற்றத்திற்காக சிறையில் அடைக்கப்பட்டபோது, ​​அவள் அந்த பாடசாலையை விட்டு சென்றதை நான் ஒருபோதும் மறக்க மாட்டேன்.

அதன் பிறகு, அவள் மிகவும் வேதனையான வாழ்க்கையை வாழ்ந்தாள். ஆனால் அந்தத் தடைகள் அனைத்தையும் மீறி, அவள் கல்வியை வென்றாள்.

சாதாரண தரப் பரீட்சையில் 9A சித்தியுடன் சித்தியடைந்தார். அவள் தேர்ச்சி பெற்றார் என்பதை சமூக ஊடகங்களில் பார்த்தபோது நான் மிகுந்த மகிழ்ச்சியடைந்தேன்.

சமூகத்திலிருந்து தனிமைப்படுத்தி.. 

"நான் என் அப்பாவை விட சிறந்த வைத்தியராகப் போகிறேன், என் அப்பாவை அவமதித்த அனைவருக்கும் நான் சிகிச்சை அளிப்பேன்..."அவள் சாதாரண தர பரீட்சை முடிவுகளுக்குப் பிறகு உறுதியுடன் சொன்னாள்.

இன்று, உயர்தரப் பரீட்சை பெறுபேறுகள் வந்தபோது அவளுடைய குரல் மீண்டும் என் காதுகளில் கேட்டது. "Sir நான் Zainab , ரிசல்ட் சொல்லத்தான் கூப்பிட்டேன் Sir , மாவட்ட ரேங்க் Rank 12 மருத்துவம் படிக்க போகலாம்..." என்று கேட்டாள்.

மகளே, நீ ஒரு துணிச்சலான மகள். உங்களையும் உங்கள் குடும்பத்தையும் சமூகத்திலிருந்து தனிமைப்படுத்தி வெறுப்பைக் கட்டவிழ்த்துவிட்ட சமூகத்தின் இலக்கை நீங்கள் அடைந்து விட்டீர்கள்.

இந்த நோய்வாய்ப்பட்ட சமூகத்தை குணப்படுத்த உங்களுக்கு ஞானம், வலிமை மற்றும் தைரியம் கிடைக்கட்டும்” என்று இந்த பதிவில் குறிப்பிடப்பட்டுள்ளது.   

தான் விரும்பியது போல மருத்துவராகி, தனது தந்தையை குற்றவாளியாக சித்தரித்து, தங்களது குடும்பத்தை சீரழித்த எல்லோருக்கும் முன்னால், தானும் ஒரு வைத்தியராக தலை நிமிர்ந்து நிற்க வேண்டும் என்ற அவரது ஆசையின் முதல் படி இப்போது நிறைவேறி இருக்கிறது என சமூக ஊடகங்களில் பலரும் இவளுக்கு வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

you may like this


வெளியாகிய உயர்தர பரீட்சை முடிவுகளின் அடிப்படையில் சாதித்த மட்டக்களப்பு மாவட்டம்

வெளியாகிய உயர்தர பரீட்சை முடிவுகளின் அடிப்படையில் சாதித்த மட்டக்களப்பு மாவட்டம்

உள்ளூராட்சித் தேர்தலின் பின்னர் ஆளும்தரப்பில் அதிகரிக்கப் போகும் கட்டுப்பாடுகள்

உள்ளூராட்சித் தேர்தலின் பின்னர் ஆளும்தரப்பில் அதிகரிக்கப் போகும் கட்டுப்பாடுகள்

 நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW 
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புதுக்குடியிருப்பு

14 Nov, 2024
மரண அறிவித்தல்

பண்டத்தரிப்பு, தமிழ் ஈழம், Hildesheim, Germany

30 Oct, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் மேற்கு, Toronto, Canada

29 Oct, 2020
12ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 2ம் வட்டாரம், புங்குடுதீவு குறிகட்டுவான், கனடா, Canada

03 Nov, 2013
2ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுங்கேணி, Scarborough, Canada

02 Nov, 2023
மரண அறிவித்தல்

மீசாலை, இலங்கை, London, United Kingdom, Scarborough, Canada

30 Oct, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு 8ம் வட்டாரம், London, United Kingdom

03 Nov, 2024
9ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, அச்சுவேலி

12 Nov, 2016
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 2ம் வட்டாரம், புங்குடுதீவு 12ம் வட்டாரம், வவுனியா, Paris, France

13 Nov, 2024
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, நவிண்டில், Toronto, Canada

01 Nov, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு 4ம் வட்டாரம்

12 Nov, 2024
மரண அறிவித்தல்

ஆனைக்கோட்டை, சவுதி அரேபியா, Saudi Arabia, சுவீடன், Sweden, London, United Kingdom, Brampton, Canada

01 Nov, 2025
மரண அறிவித்தல்

மீசாலை, மானிப்பாய், Toronto, Canada

31 Oct, 2025
மரண அறிவித்தல்

பருத்தித்துறை, திருகோணமலை, கொழும்பு, London, United Kingdom, Toronto, Canada

30 Oct, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, யாழ்ப்பாணம்

02 Nov, 2015
10ம் ஆண்டு நினைவஞ்சலி
10ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

சண்டிலிப்பாய், மானிப்பாய், London, United Kingdom, கனடா, Canada

02 Nov, 2020
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சுன்னாகம், Neuilly-sur-Marne, France

12 Nov, 2024
3ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு, கன்னாதிட்டி, Velbert, Germany, Brampton, Canada

04 Nov, 2022
மரண அறிவித்தல்
6ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், Vaughan, Canada

30 Oct, 2019
5ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, பாண்டியன்குளம், Toronto, Canada

30 Oct, 2020
மரண அறிவித்தல்

அனலைதீவு 3ம் வட்டாரம், Oberburg, Switzerland

28 Oct, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

நெல்லியடி, London, United Kingdom

03 Oct, 2025
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 7ம் வட்டாரம், இராமநாதபுரம், Villetaneuse, France

27 Oct, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 2ம் வட்டாரம், புங்குடுதீவு 12ம் வட்டாரம், Markham, Canada

17 Oct, 2024
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US