கண்டி சுத்திகரிப்புத் தொழிலாளர்களுக்கு கிடைக்கப் போகும் அதிர்ஷ்டம்
கண்டி நகர சுத்திகரிப்புத் தொழிலாளர்களுக்கு இன்று மாலை வரிசைகளில் நிற்காது புனித தந்த தாதுவைத் தரிசிப்பதற்கான வாய்ப்பு வழங்கப்படவுள்ளது.
கண்டி தலதா மாளிகையில் காட்சிப்படுத்தப்படும் கௌதம புத்தரின் புனித தந்த தாதுவை பார்வையிட நாட்டின் நாலாபக்கங்களில் இருந்தும் பல்லாயிரம் மக்கள் நாளாந்தம் கண்டிக்கு வருகை தந்து கொண்டிருக்கின்றனர்.
புனித தந்த தாதுவை பார்வையிட ஏற்பாடு
அவ்வாறு வருகை தரும் பொதுமக்கள் இதுவரை 500 மெட்ரிக் தொன்னுக்கும் அதிகமான கழிவுகளையும், குப்பைகளையும் கண்டி நகரப் பகுதியில் கைவிட்டிருந்தனர்.
அவற்றை சுத்திகரித்து கண்டியை சுத்தமாக வைத்திருப்பதில் கடந்த நாட்களில் சுத்திகரிப்புத் தொழிலாளர்கள் பாரிய அர்ப்பணிப்புடன் செயற்பட்டிருந்தனர்.
அவர்களின் சேவையைக் கௌரவிக்கும் வகையில் இன்றைய தினம் முக்கிய பிரமுகர்களுக்கான வரிசையொன்று ஏற்பாடு செய்யப்பட்டு அதன் ஊடாக வரிசைகளில் காத்திருக்காது கண்டி சுத்திகரிப்புத் தொழிலாளர்கள் புனித தந்த தாதுவை பார்வையிட ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.





பாகிஸ்தானை கடுமையாக தண்டிக்க தயாரான இந்தியா - கருணை காட்டுமாறு கெஞ்சவைக்க மோடி அரசு திட்டம் News Lankasri

ஜேர்மனி பிரித்தானியா ஒப்பந்தம் கையெழுத்து: சிறிது நேரத்தில் ரஷ்யாவிலிருந்து வந்த எச்சரிக்கை News Lankasri

அறிவுக்கரசிக்கு ஈஸ்வரி கொடுத்த பைனல் டச் என்னா அடி, சக்தி, ஜனனி காதல்.. தரமான எதிர்நீச்சல் புரொமோ Cineulagam

5 போர் விமானங்கள் சுட்டு வீழ்த்தப்பட்டன... ஆபரேஷன் சிந்தூர் தொடர்பில் ட்ரம்ப் மீண்டும் அதிரடி News Lankasri
