மலையகத்தில் தொடரும் சீரற்ற காலநிலை
ஹட்டன் பகுதியில் நேற்றைய தினம் வீசிய பலத்த காற்றினால், ஹட்டன் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட ருவான்புர பொலனி, ஹட்டன் குடாகம, ஹட்டன் சித்தார தோட்டம் மற்றும் டிக்கோயா பகுதிகளில் உள்ள பல வீடுகளின் கூரைகள் முழுமையாகவும், பகுதியளவிலும் அள்ளுண்டு சென்றுள்ளதாகவும் மக்கள் தெரிவித்துள்ளனர்.
மேலும், அந்தப் பகுதிகளில் உயர் மின்னழுத்த மின் கம்பிகள் மற்றும் மின் கம்பங்கள் சரிந்து விழுந்ததாகவும் ஹட்டன் தலைமையக பொலிஸ் நிலையத்தின் தலைமை பொலிஸார் ரஞ்சித் ஜெயசேன தெரிவித்துள்ளார்.
மேற்படி வீடுகளில் வசிப்பவர்கள் தற்காலிகமாக தங்கள் உறவினர்களின் வீடுகளுக்கு இடம்பெயர்ந்துள்ளனர்.
ஹட்டன் பகுதி
மேலும் மத்திய மலைநாட்டில் கடுமையான சீரற்ற வானிலைதொடர்ந்தும் நிலவி வருவதாக அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
வீசிய பலத்த காற்று காரணமாக, ஹட்டன் பகுதி முழுவதும் உயர் மின்னழுத்த மின் கம்பிகள் மற்றும் மின் கம்பங்கள் அறுந்து விழுந்துள்ளதாகவும், மின் தடையை சரிசெய்ய முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் அட்டன் மின்சார சபையின் மின்சார கண்காணிப்பாளர் நிமல் சமரகோன் தெரிவித்துள்ளார்.
இதேவேளை, நோர்டன்பிரிட்ஜில் உள்ள விமலசுரேந்திர நீர்மின் நிலையத்திற்கு செல்லும் வீதியில் (30) இரவு ஒரு பெரிய மரம் விழுந்ததால், (31) அதிகாலை வரை வீதியின் போக்குவரத்து முற்றிலும் பாதிக்கப்பட்டிருந்தது.
மின்சார சபை
நோர்டன்பிரிட்ஜ் பகுதியில் வீசிய பலத்த காற்றின் போது குறித்த மரம் விழுந்ததாக நோர்டன்பிரிட்ஜ் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இதே நேரத்தில், ஹட்டனில் இருந்து தலவாக்கலை வரை செல்லும் உயர் மின்னழுத்த மின்கம்பி அமைப்பு (30) இரவு சரிந்து விழுந்ததால், கொட்டகலை மற்றும் தலவாக்கலை பகுதிகளுக்கு மின்சாரம் முற்றிலும் பாதிக்கப்பட்டதாக மின்சார சபை தெரிவித்துள்ளது.
மண்சரிவு அபாய எச்சரிக்கை
மேலும், இலங்கையில் நிலவும் சீரற்ற காலநிலை காரணமாக ஐந்து மாவட்டங்களுக்கான மண்சரிவு அபாய எச்சரிக்கை நீடிக்கப்பட்டுள்ளது என்று தேசிய கட்டட ஆராய்ச்சி நிறுவனம் தெரிவித்துள்ளது.
இந்த மண்சரிவு அபாய எச்சரிக்கையானது இன்று சனிக்கிழமை மாலை 4 மணி முதல் நாளை ஞாயிற்றுக்கிழமை மாலை 4 மணி வரை நடைமுறைபடுத்தப்பட்டுள்ளது.
மண்சரிவு அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ள மாவட்டங்கள் பின்வருமாறு:-
* காலி மாவட்டம் - பத்தேகம பிரதேச செயலகப் பிரிவு
* கேகாலை மாவட்டம் - அரநாயக்க
* நுவரெலியா மாவட்டம் - அம்பகமுவ, நோர்வூட் ஆகிய பிரதேச செயலகப் பிரிவுகள்
* இரத்தினபுரி மாவட்டம் - இரத்தினபுரி பிரதேச செயலகப் பிரிவு
* கண்டி மாவட்டம் - மேல் கோரளை பிரதேச செயலகப் பிரிவு
மேலதிக தகவல் - ராகேஸ்
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |

காணி நிலம் வேண்டும் பராசக்தி 20 மணி நேரம் முன்

பாதி உண்மை தெரிந்ததற்கே மயிலை வீட்டை விட்டு அனுப்பிய சரவணன் .. பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 அடுத்த வார ப்ரோமோ Cineulagam

பாரதி கண்ணம்மா-னு டைட்டில் மாத்திடுங்க.. சின்ன மருமகள் சீரியல் ப்ரோமோவை கலாய்க்கும் நெட்டிசன்கள் Cineulagam

பரிசோதிக்காமல் களமிறக்கிவிடப்பட்ட உக்ரைனின் புதிய ஆயுதம் - அதன் நிலை குறித்து வெளியான தகவல்கள் News Lankasri
