மன்னார் - பேசாலையில் பிரதான வீதியை மறித்து போராட்டம்
மன்னாரில் இன்றைய தினம் லிட்ரோ எரிவாயு விநியோகிக்கப்பட்ட சந்தர்ப்பத்தில் பேசாலை கிராம மக்கள் பிரதான வீதியை மறித்து போராட்டம் ஒன்றை முன்னெடுத்துள்ளனர்.
நீண்ட காலமாக எரிவாயு இன்றி பல்வேறு இன்னல்களுக்கு முகம் கொடுத்து வருகின்றதாகவும், லிட்ரோ எரிவாயு வழங்கும் நடவடிக்கை முன்னெடுக்கப்படவில்லை எனவும் போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் குறிப்பிட்டுள்ளனர்.
இந்த போராட்டம் காரணமாக குறித்த பிரதான வீதியூடான போக்குவரத்து சிறிது நேரம் பாதிக்கப்பட்டதாக எமது பிராந்திய செய்தியாளர் தெரிவித்தார்.
இந்நிலையில் பேசாலை பொலிஸார் சம்பவ இடத்திற்கு வந்து போராட்டத்தில் ஈடுபட்ட மக்களுடன் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளனர்.
அத்துடன் பேசாலை கிராமத்திற்கு 100 லிட்ரோ எரிவாயு கொள்கலன்களை பெற்றுத்தருவதாக பொலிஸார் உறுதி அளித்ததை தொடர்ந்து மக்களின் போராட்டம் கைவிடப்பட்டுள்ளது.



