நல்லூர் மந்திரிமனை தொடர்பாக மக்கள் மத்தியில் ஏற்பட்டுள்ள குழப்ப நிலை: பரமு.புஷ்பரட்ணம் விளக்கம்

Jaffna Sri Lankan Peoples Northern Province of Sri Lanka
By Theepan 2 மாதங்கள் முன்
Report

நல்லூர் மந்திரிமனை தொடர்பாக மக்கள் மத்தியில் ஏற்பட்டுள்ள குழப்ப நிலை பற்றி தொல்லியல் துறையின் சிரேஷ்ட பேராசிரியர் பரமு.புஷ்பரட்ணம் விளக்கமளித்துள்ளார்.

இது தொடர்பில் ஊடகங்களிடம்  தெரிவித்ததாவது, 

“யாழ்ப்பாணத்தில் மரவுரிமை இடங்களாக 86 இடங்கள் பிரகடனப்படுத்தப்பட்டுள்ளதுடன் அதில் முதலாவதாக மந்திரிமனை, சங்கிலியன் தோரண வாசல், ஜமுனா ஏரி மற்றும் சங்கிலியன் அரண்மனை ஆகிய இடங்களும் அவற்றுக்கான பெயர்ப் பலகையும் அங்கே காட்சிப்படுத்தப்பட்டு அவை வர்த்தகமானிகளிலும் வெளியிடப்பட்டுள்ளது.

நல்லூர் மந்திரிமனை தொடர்பாக மக்கள் மத்தியில் ஏற்பட்டுள்ள குழப்ப நிலை: பரமு.புஷ்பரட்ணம் விளக்கம் | People Are Confused About Nallur Mantrimani 

மந்திரிமனை

மேலும் இத்தொல்லியல் திணைக்களமானது மரவுரிமை இடங்களாக அடையாளப்படுத்தி அதனை வர்த்தகமானியில் பிரசுரம் செய்தால் நில உரிமையாளர் அங்கு புதிதாக எதையும் மாற்றி அமைக்க முடியாதெனவும் அதே சமயத்தில் தொல்லியல் திணைக்களமும் நில உரிமையாளரின் அனுமதியின்றி எந்த நடவடிக்கையினையும் மேற்கொள்ளாது.

இதனால்தான் மந்திரிமனை உரிய காலத்தில் பேணப்படாமைக்கான காரணமெனவும் சமயம் தொல்லியல் திணைக்களம் மந்திரி மனை தொடர்பாக மிகுந்த அக்கறையுடன் நில உரிமையாளருடன் பேரம்பேசி அந்த நிலத்தைப் பெற்று அதனை சீர் செய்யும் வசதிகளும் நிலமைகளும் தற்போது தொல்லியல் திணைக்களத்திடம் இல்லை என்றும் யாழ்ப்பாண பல்கலைக்கழக தொல்லியல் துறை சிரேஷ்ட பேராசிரியர் பரமு. புஷ்பரட்ணம் சுட்டிக்காட்டியுள்ளார்.

அதனால் தான் நாம் யாழ்ப்பாணத்தில் மரவுரிமை மையம் ஒன்றினை உருவாக்கி அதன் முதல் பணியாக சங்கிலியன் தோரண வாசலை மீள் உருவாக்கம் செய்து அதுமுடிவுறும் நிலையில் இருக்கின்றது. இரண்டு வாரத்தில் அது முடிவடையும் அதை செய்வதற்கு எங்களுடைய மருத்துவபீட பேராசிரியர் மருத்துவர் ரவிராஜ் அவர்கள் 2.2 மில்லியன் ரூபாவினையையும் அதற்குரிய செலவு முழுவதையும் ஏற்றுக் கொண்டதுடன்  மந்திரி மனையை மீள் உருவாக்கம் செய்கின்ற முயற்சியில் ஈடுபட்டபோது அதனுடைய உரிமையாளர் எங்களோடு தொடர்பு கொண்டு சில நிபந்தனைகளை விதித்தார்.

தன்னுடைய நிலங்கள் அபகரிக்கப்பட்டு தனியாரால் சில கட்டடங்கள் கட்டப்பட்டுள்ளன எனவும், அவற்றை சட்டநாதர் கோவிலுக்குப் பெற்றுத்தருவதற்கு உதவ வேண்டும் என கேட்டுக்கொண்டார்.

நல்லூர் மந்திரிமனை தொடர்பாக மக்கள் மத்தியில் ஏற்பட்டுள்ள குழப்ப நிலை: பரமு.புஷ்பரட்ணம் விளக்கம் | People Are Confused About Nallur Mantrimani

நிலம் 

நாங்களும் முயற்சித்தோம் அது முழுமையாக வெற்றி அளிக்கவில்லை. பின்னர் நாங்கள் அந்த நிலத்தை விலை கொடுத்து வாங்குவதற்கு முயற்சி எடுத்தோம். அதனை அவர் தவணை முறையில் பணம் செலுத்தி பெறுவதற்கு ஒப்புக்கொண்டு பல மாதங்கள் பேசியதன் பின்னர் இப்பொழுது எங்களுக்கு அதற்கான ஒப்புதலைத் தந்திருக்கின்றார். நாங்கள் தற்போது அதற்குரிய பணத்தை அவருக்குக் கொடுத்து மீள் உருவாக்க பணியை முன்னெடுத்துள்ளோம் சில ஆரம்பப் பணிகள் ஏற்கனவே செய்யப்பட்டிருக்கின்றன.

அவ்வாறு செய்து கொண்டிருக்கும் பொழுதுதான் நில உரிமையாளர் ஒப்பந்த முடியும் வரை ஒன்றும் செய்ய வேண்டாம் என்று கேட்டுக் கொண்டார். இதனால்தான் அந்த இடத்தினை தொல்லியல் திணைக்களம் தனியாக மீள் உருவாக்கம் செய்ய முடியாது. அதே நேரத்தில் நில உரிமையாளரும் வர்த்தகமானியில் வெளியிடப்பட்ட மரவுரிமைச் சின்னத்தை தான் விரும்பியவாறு எந்த மாற்றத்தினையும் மேற்கொள்ள முடியாது.

இப்பொழுது நில உரிமையாளர் எங்களுக்கு நிலத்தைத் தருவதற்கு முழுமையான ஒப்புதல் அளித்திருக்கின்றார். நாங்கள் தொல்லியல் திணைக்களத்தின் அனுமதியுடன் மீள் உருவாக்கம் செய்வதற்கான திட்டங்கள் எல்லாம் கொடுக்கப்பட்டு அவை தொல்லியல் திணைக்களத்தினாலும் அங்கீகரிக்கப்பட்டுள்ளன. எனவே சங்கிலியன் தோரண வாசல் வேலைகள் பூர்த்தி அடைந்ததன் பின்னர் மந்திரிமனையின் பணிகள் ஆரம்பிக்கப்படும்.

அதனை மேற்கொள்வதற்கு இன்று மக்கள் மத்தியில் அதிருப்தி நிலையத்தில் இருக்கிறவர்களும் பெரும் பங்களிப்புச் செய்ய வேண்டும் ஐந்து பேர் நினைத்த உடனே இதை செய்து கொள்ள முடியாது.  பல மில்லியன் கணக்கான பணம் அவற்றை மீள உருவாக்குவதற்கு எங்களுக்கு தேவை நாங்கள் அந்த பணியை தொடங்குகின்ற பொழுது ஊடகங்கள் ஊடாகவும் அதிருப்தி நிலையில் உள்ள மக்களிடமும் அவற்றை மீள் உருவாக்கம் செய்வதற்கு நிதி உதவி செய்யுமாறு வேண்டுகோள் விடுப்போம்.

அவ்வாறு செய்கின்ற பொழுது அவர்களின் எதிர்பார்ப்பை நிறைவு செய்ய முடியும் என்பது தான் உண்மையான நிலைப்பாடு நிபந்தனைகள்” என தெரிவித்தார்.

தமிழ் படிக்க ஆசிரியர் இல்லையே என்ற கவலை இனியும் வேண்டாம். uchchi.com இன் இணையவழிக் கற்கை நெறிகளில் இன்றே இணையுங்கள்.

மரண அறிவித்தல்

குரும்பசிட்டி, Toronto, Canada

29 May, 2023
2ம் ஆண்டு நினைவஞ்சலி

மண்டைதீவு, Brampton, Canada

22 May, 2021
2ம் ஆண்டு நினைவஞ்சலி

ஆவரங்கால், Bremerhaven, Germany, Fribourg, Switzerland, Chennai, India

24 May, 2021
மரண அறிவித்தல்

காரைநகர், புதுறோட், வவுனியா

30 May, 2023
மரண அறிவித்தல்

தம்பிலுவில், சென்னை, India, பேர்லின், Germany, London, United Kingdom

25 May, 2023
மரண அறிவித்தல்

யாழ் ஊரெழு மேற்கு, Jaffna, பேர்ண், Switzerland

26 May, 2023
நன்றி நவிலல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Saarbrücken, Germany, London, United Kingdom

01 May, 2023
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Toronto, Canada

27 May, 2023
மரண அறிவித்தல்

பலாலி, London, United Kingdom

27 May, 2023
மரண அறிவித்தல்

வண்ணார்பண்ணை

27 May, 2023
மரண அறிவித்தல்

மிருசுவில், மன்னார் பண்டிவிரிச்சான், அச்சுவேலி, Aulnay-sous-Bois, France

28 May, 2023
மரண அறிவித்தல்

Nakskov, Denmark, Faaborg, Denmark, Copenhagen, Denmark

18 May, 2023
1ம் ஆண்டு நினைவஞ்சலி

உரும்பிராய் வடக்கு

10 Jun, 2022
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மலேசியா, Malaysia, கோப்பாய் வடக்கு, கோண்டாவில் கிழக்கு, வெள்ளவத்தை, London, United Kingdom

11 Jun, 2022
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கோண்டாவில் கிழக்கு, கொழும்பு 6

24 Mar, 2022
10ம் ஆண்டு நினைவஞ்சலி

கோப்பாய் வடக்கு

29 May, 2013
31ம் நாள் நினைவஞ்சலி

சுழிபுரம், கண்டி

28 Apr, 2023
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, பளை, உருத்திரபுரம், Toronto, Canada

29 May, 2022
8ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 9ம் வட்டாரம், கிளிநொச்சி, டென்மார்க், Denmark, London, United Kingdom

01 Jun, 2015
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

மறவன்புலோ, Zürich, Switzerland

23 May, 2023
மரண அறிவித்தல்

பாண்டிருப்பு, Scarborough, Canada

13 May, 2023
1ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி கிழக்கு, Maldives, சம்பியா, Zambia, Transkei, South Africa, Windsor Slough, United Kingdom, Preston, United Kingdom

03 Jun, 2022
+44 20 3137 6284
UK
+41 315 282 633
Switzerland
+1 437 887 2534
Canada
+33 182 888 604
France
+49 231 2240 1053
Germany
+1 929 588 7806
US
+61 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US