வீடொன்றில் இடம்பெற்ற விருந்து: இளம் யுவதிகள் உட்பட 19 பேர் கைது
ஹோமாகம - மாகம்மன பிரதேசத்தில் உள்ள வீடொன்றில் போதைப்பொருள் பாவனையில் ஈடுபட்ட 19 பேரையும், 08 யுவதிகளையும் பொலிஸார் கைது செய்துள்ளனர்.
கஹதுடுவ பொலிஸாருக்கு கிடைத்த தகவலின் பிரகாரம் மாகம்மன பிரதேசத்தில் உள்ள வீடொன்றில் இடம்பெற்ற விருந்தில் கலந்து கொண்ட இந்த குழுவினரை சுற்றிவளைத்து பொலிஸார் கைது செய்துள்ளனர்.
சந்தேகநபர்கள் 3 பேரிடம் இருந்து ஹாஷிஸ் போதைப்பொருளும், மேலும் மூன்று சந்தேகநபர்களிடம் இருந்த போதை மாத்திரைகளும் பொலிஸாரால் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

பொலிஸார் மேலதிக விசாரணை
கைது செய்யப்பட்ட சந்தேகநபர்கள் அனைவரும் 20 மற்றும் 22 வயதுடையவர்கள் என பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
சந்தேகநபர்கள் பொலன்னறுவை, தெஹியத்தகண்டிய, காலி, கண்டி மற்றும் தியத்தலாவ ஆகிய பகுதிகளைச் சேர்ந்தவர்கள் என மேலதிக விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை கஹதுடுவ பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
டிசம்பர் 6 இந்தியாவின் 4 நகரங்களில் குண்டு வெடிப்புக்கு திட்டம் - விசாரணையில் அதிர்ச்சி தகவல் News Lankasri
ரஜினி, கமல் படத்திலிருந்து சுந்தர் சி திடீர் விலகல்.. அதிர்ச்சியில் ரசிகர்கள்.. என்ன ஆச்சு Cineulagam