புதிய சபாநாயகரின் அதிகாரபூர்வ இல்லம் தொடர்பில் வெளியான தகவல்
புதிய சபாநாயகர் ஜகத் விக்ரமரட்ன தனக்கான அதிகாரபூர்வ இல்லத்தை பயன்படுத்துவதில்லை என தெரிவிக்கப்படுகின்றது.
கடந்த டிசம்பர் மாதம் 14ம் திகதி பத்தாம் நாடாளுமன்றின் புதிய சபாநாயகராக ஜகத் விக்ரமரட்ன தெரிவு செய்யப்பட்டார்.
எனினும் அன்று முதல் இன்று வரையில் நாடாளுமன்றிற்கு அருகாமையில் அமைந்துள்ள அதிகாரபூர்வ இல்லத்தை பயன்படுத்தவில்லை என நாடாளுமன்றத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
சபாநாயகர் அலுவலகம்
எனினும் அமர்வுகள் நடைபெறும் தினத்திலும் நடைபெறாத சில நாட்களிலும் சபாநாயகர் அலுவலகத்திற்கு வருகை தருவதாகவும், அவர் எங்கு தங்கியிருக்கின்றார் என்பது தெரியவில்லை எனவும் நாடாளுமன்ற பணியாளர்கள் தெரிவிக்கின்றனர்.
ஜகத் விக்ரமரட்ன கடந்த பொதுத் தேர்தலில் பொலனறுவை மாவட்டத்தில் போட்டியிட்டு வெற்றியீட்டியவர் என்பது குறிப்பிடத்தக்கது.
தேசிய மக்கள் சக்தியின் முன்னாள் சபாநாயகர் அசோக ரன்வல பதவி விலகியதனைத் தொடர்ந்து ஜகத் விக்ரமரட்ன அந்தப் பதவிக்கு நியமிக்கப்பட்டார்.

ரணில் அரசாங்கத்தின் முன்னாள் அமைச்சர் செய்த மிகப்பெரிய மோசடி! அதிரடி நடவடிக்கைகளுக்கு தயாராகும் அநுர அரசு





6 ஆண்டுகால ஐ.நா மைய அரசியல்: பெற்றவை? பெறாதவை...... 2 மணி நேரம் முன்

பிரித்தானியாவில் ட்ரம்பின் வரலாற்று சிறப்புமிக்க பயணம்: கேட்டைப் பார்த்து அவர் கூறிய வார்த்தை News Lankasri

உலகின் சக்தி வாய்ந்த கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணைகள் - முதலிடத்தில் உள்ள நாடு எது? News Lankasri

சித்திரவதை செய்யப்பட்டு கடலில் தூக்கி எறியப்பட்ட புலம்பெயர்ந்தோர்: அதிரவைக்கும் ஒரு செய்தி News Lankasri
