நான்கு நாள் நாடாளுமன்ற அமர்வுகள் இரண்டாக குறைக்கப்பட்டன: கூறப்பட்ட காரணம்
குறைக்கப்பட்ட நாட்கள்
நாடாளுமன்ற அமர்வுகள் இந்த வாரத்தில் இரண்டு நாட்களுக்கு மட்டுப்படுத்தப்பட்டுள்ளதாக சபைத் தலைவர் அமைச்சர் தினேஷ் குணவர்தன தெரிவித்துள்ளார்.
நிலவும் எரிபொருள் நெருக்கடியை கருத்திற்கொண்டு இன்று கூடிய நாடாளுமன்ற அலுவல்கள் குழு கூட்டத்தில் இந்த தீர்மானம் எட்டப்பட்டுள்ளது.
அதன்படி இன்றும் (ஜூன் 21) நாளையும் (ஜூன் 22) நாடாளுமன்ற அமர்வுகள் இடம்பெறவுள்ளன.
எதிர்க்கட்சிகளின் முடிவு
நிலவும் பொருளாதார மற்றும் அரசியல் நெருக்கடிக்கு அரசாங்கத்திடம் தீர்வுகள் இல்லையென்று கூறி, எதிர்க்கட்சிகள் இந்த வாரத்தின் நாடாளுமன்ற அமர்வுகளை பகிஸ்கரிக்க முடிவெடுத்து, சபையில் இருந்து வெளியேறிய பின்னரே இந்த நாட்குறைப்பு நிகழ்ந்துள்ளது.