மஹிந்த ராஜபக்ச, தம்பி கோட்டாபயவுக்கு கூறிய கதை
ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவுக்கு மஹிந்தாநந்த அளுத்கமகே ஆலோசனை வழங்குகிறார் மஹிந்த ராஜபக்சக்கு அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்ணான்டோ ஆலோசனை வழங்குகிறார் பசில் ராஜபக்சவுக்கு ரோஹித்த அபேகுணவர்த்தன ஆலோசனை வழங்குகிறார் இவர்களின் மூவரின் ஆலோசனையின்படியே இன்று தீர்மானங்கள் அமைவதாக ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் மனுஷ நாணயக்கார இன்று நாடாளுமன்றில் தெரிவித்தார் |
அரசாங்கம் இரசாயன பசளைகளை இறக்குமதி செய்யும் போது மாத்திரமா? சிறுநீரக நோய்கள் ஏற்படுகின்றன. தனியார் துறையினால் இரசாயன பசளைகளை இறக்குமதி செய்யும் போது சிறுநீரக நோய்கள் ஏற்படாதா? என்று நாடாளுமன்ற உறுப்பினர் ரோஹினிகுமாரி விஜேரத்ன இன்று நாடாளுமன்றில், அமைச்சர் மஹிந்தாநந்த அளுத்கமகேயிடம் கேள்வி எழுப்பினார். |
கவிழப்போகும் படகு ஒன்றில் பயணித்த இருவர் தொடர்பில் பிரதமர் மஹிந்த ராஜபக்ச கூறிய கதையை நாடாளுமன்ற உறுப்பினர் ரோஹன பண்டார விஜேசுந்தர நினைவுப்படுத்தினார். ”ஆறு ஒன்றில் பயணிக்கும் படகு கவிழப்போகும் போது அதில் இருந்த ஒருவர், தம்மை காப்பாற்றினால், தாம் பழவகைகளைக் கொண்டு பூசை செய்யப்போவதாக கடவுளிடம் வேண்டுகிறார்” அடுத்தவர், தம்மை காப்பாற்றினால், ஒரு லட்சம் பழத்தட்டுக்களைக் கொண்டு பூசை செய்வதாக குறிப்பிடுகிறார். இதனை பார்த்த முதலாமவர், இவ்வளவு பொிய எண்ணிக்கை பழத்தட்டுக்களைக் கொண்டு கடவுளுக்கு பூசை செய்வதாக கூறுகிறாயே! கடவுள் காப்பாற்றினால் உனக்கு அதனை நிறைவேற்றமுடியுமா? என்று கேட்கிறார். இதற்கு பதிலளித்த இரண்டாமவர், எல்லாம் நடக்கும் வரைதான், நடந்தப்பின்னர் எதனையும் செய்யத்தேவையில்லை என்று கூறுகிறார்” இதனையே , மஹிந்த ராஜபக்ச, ஜனாதிபதி தேர்தல் பிரசாரத்தின்போது சகோதரரான கோட்டாபயவுக்கு கூறியிருக்கவேண்டும் என்று ரோஹன பண்டார விஜேசுந்தர சுட்டிக்காட்டினார். தேர்தல் பிரசாரத்தின்போது பசளையை இலவசமாக தருவதாக கூறு. வந்த பின்னர் பார்த்துக்கொள்ளலாம் என்று மஹிந்த ராஜபக்ச, கோட்டாபய ராஜபக்சவிடம் கூறியிருக்கவேண்டும். இதனை நம்பியே கோட்டாபயவும் ”பசளையை இலவசமாக தருகிறேன்” என்று உறுதியளித்திருக்கவேண்டும் என்று ரோஹன பண்டார விஜேசுந்தர தெரிவித்தார். |
ஐரோப்பிய நாடுகள் இலங்கைக்கு வழங்கிய கடனை திருப்பித் தருமாறு இலங்கையிடம் வலியுறுத்தியிருப்பதாக நாடாளுமன்ற உறுப்பினர் துஷார இந்துனில் தெரிவித்துள்ளார். குறித்த நாடுகளிடம் பெற்ற கடனை திருப்பித் தரும் காலத்தை நீடிக்க வாய்ப்பிருந்தபோதும் அதனை மேற்கொள்ளாது போனதால், தற்போது ஐரோப்பிய நாடுகளிடம் இருந்து பெற்ற கடனை ஒரே தடவையில் திருப்பிச்செலுத்தவேண்டியுள்ளதாக துஷார இந்துனில் குறிப்பிட்டுள்ளார். |