நாடாளுமன்ற வரப்பிரசாதம் - எத்தனை பேர்? எவ்வாறு? பயன்படுத்துகின்றனர்
நாடாளுமன்றம் என்பது ஒரு நாட்டின் உயர் சபையாக கருதப்படுகின்றது. அந்த நாடாளுமன்றமே ஒரு நாட்டின் சட்டங்களை இயற்றும் அதிகாரத்தைக் கொண்டிருக்கின்றது.
எனவே பொதுமக்களால் தெரிவு செய்யப்பட்டு நாடாளுமன்றத்துக்கு அனுப்பப்படும் உறுப்பினர்கள், நாடாளுமன்றத்தில் வரப்பிரசாதங்களைக் கொண்டுள்ளனர்.
இந்த வரப்பிரசாதங்கள் வெறுமனே, அவர்களுக்கு கொடுப்பனவு மற்றும் வாகன வசதிகள் என்பதற்கு அப்பால், பொது மக்களுக்கான எந்த பிரச்சினை தொடர்பிலும் நாடாளுமன்றத்தில் கருத்துக்களை வெளிப்படுத்த முடியும் என்பதையே வலியுறுத்துகின்றது.
பொதுவாக பிரித்தானிய ஆட்சியினரால் அறிமுகப்படுத்தப்பட்ட நாடாளுமன்றம், பெரும்பாலான நாடுகளில் தமது பணிகளை சிறப்பாகவே செய்து வருகின்றது.
இந்த நிலையில் இலங்கை உட்பட பல நாடுகளில் நாடாளுமன்ற ஜனநாயகத்துக்கு உரிய மதிப்பளிக்கப்படுவதில்லை என்ற குற்றச்சாட்டு சுமத்தப்படுகின்றது.
இலங்கையை பொறுத்தவரை, நாடாளுமன்ற வரப்பிரசாதம் என்பது வெறுமனே பேச்சளவில் உள்ளதையே காணமுடிகின்றது. பொதுமக்களின் உண்மையான பிரச்சினைகளுக்காக, தமது வரப்பிரசாரத்தை , தமிழ் முஸ்லிம் நாடாளுமன்ற உறுப்பினர்களில் பெரும்பாலானோர் பயன்படுத்துவதில்லை.
சிங்கள நாடாளுமன்ற உறுப்பினர்களை பொறுத்தவரையில் அவர்கள், தமது தொகுதி மக்களின் பிரச்சினைகளை அல்லது நாட்டின் முக்கிய பிரச்சினைகள் தொடா்பில் நாடாளுமன்றத்தை பயன்படுத்திக்கொள்கின்றனர். எனினும் தமிழ், முஸ்லி்ம் நாடாளுமன்ற உறுப்பினர்களின் சிலர் மாத்திரமே அதனை பயன்படுத்துகின்றனர் என்பது வருந்தத்தக்க விடயமாகும்.
இதேவேளை இந்த நாடாளுமன்ற வரப்பிரசாதத்தை எத்தனை பேர் முறையற்ற வகையில் பயன்படுத்துகின்றனர் என்பதும் தற்போது விவாதத்துக்குரிய விடயமாக மாறியுள்ளது.
இதனை தவிர, நாட்டின் உயர் சபையாக கருதப்படும் நாடாளுமன்றத்தில் ஒழுக்கம் எவ்வாறு கடைப்பிடிக்கப்படுகிறது என்பது ஆராய வேண்டிய விடயமாக உள்ளது.இலங்கையில் தற்போது 2022ஆம் ஆண்டுக்கான பாதீட்டு விவாதங்கள் நாடாளுமன்றத்தில் இடம்பெற்று வருகின்றன.
இதன்போது நாள்தோறும் ஆளும் கட்சிக்கும், எதிர்கட்சிக்கும் இடையில் வாதவிவாதங்கள் இடம்பெறுகின்றன. எனினும் அவை சமூகத்துக்கு அல்லது நாட்டுக்கு பயன் உள்ள வகையில் அமைகிறதா? என்பதை ஆராய்ந்தால், இல்லை என்றே கூறமுடியும்.
அரசாங்க கட்சி தவறு இழைத்தது என்று சுட்டிக்காட்டும் போது அதனை ஆராய்ந்து விட்டு தவறை திருத்திக்கொள்ளும் பக்குவம் அரசாங்க கட்சிக்கு இல்லை.
அதேபோன்று நாடு அல்லது சமூகம் என்ற அடிப்படையில் அரசாங்கம் ஏதாவது தவறு இழைக்கும்போது அதனை சுட்டிக்காட்டி ஆரம்பத்திலேயே பாரிய பிரச்சினைகளுக்கு தீர்வுக்காணும் முயற்சிகளுக்காக எதிர்கட்சியும் ஜனநாயக ரீதியில் தமது அழுத்தங்களை பிரயோகிப்பதில்லை. மறுபுறத்தில் ஒழுக்கம் என்பது நாடாளுமன்றத்தில் கடைபிடிக்கப்படுகிறதா? என்பதை நாள் தோறும் நாடாளுமன்ற நிகழ்வுகளை பார்த்துக்கொண்டிருப்போர் காணக்கூடியதாக இருக்கும்.
தகாத வார்த்தைப் பிரயோகங்கள், சமூகத்துக்கு முன்னுதாரணங்களாக எடுத்துக்கொள்ளமுடியாத விடயங்களை நாடாளுமன்றத்தில் பார்க்கக்கூடியதாக உள்ளது. எனவே ஜனநாயகத்தின்பால் இந்த விடயங்கள் சாி செய்யப்பட வேண்டும்.
நாடாளுமன்றம், சட்டங்களை இயற்றும் சபைகளாக செயற்படும் அதேநேரம் சமூகத்துக்கு முன்னுதாரணமான நிறுவனமாகவும் செயற்படுவது அவசியமாகும். இதன்போது எதிர்கால சமூகத்துக்கு நாடாளுமன்றம் என்பதன் முக்கியத்துவத்தை உணர்த்த முடியும்.
Tarzanie Pushparaj, 19 min நாடாளுமன்றம் என்பது ஒரு நாட்டின் உயர் சபையாக கருதப்படுகிறது. அந்த நாடாளுமன்றமே ஒரு நாட்டின் சட்டங்களை இயற்றும் அதிகாரத்தைக் கொண்டிருக்கின்றது.
எனவே பொதுமக்களால் தெரிவு செய்யப்பட்டு நாடாளுமன்றத்துக்கு அனுப்பப்படும் உறுப்பினர்கள், நாடாளுமன்றத்தில் வரப்பிரசாதங்களைக் கொண்டுள்ளனர்.
இந்த வரப்பிரசாதங்கள் வெறுமனே, அவர்களுக்கு கொடுப்பனவு மற்றும் வாகன வசதிகள் என்பதற்கு அப்பால், பொதுமக்களுக்கான எந்த பிரச்சினை தொடர்பிலும் நாடாளுமன்றத்தில் கருத்துக்களை வெளிப்படுத்தமுடியும் என்பதையே வலியுறுத்துகின்றது.
பொதுவாக பிரித்தானிய ஆட்சியினரால் அறிமுகப்படுத்தப்பட்ட நாடாளுமன்றம், பெரும்பாலான நாடுகளில் தமது பணிகளை சிறப்பாகவே செய்து வருகின்றது. இந்த நிலையில் இலங்கை உட்பட்ட பல நாடுகளில் நாடாளுமன்ற ஜனநாயகத்துக்கு, உரிய மதிப்பளிக்கப்படுவதில்லை என்ற குற்றச்சாட்டு சுமத்தப்படுகின்றது.
இலங்கையை பொறுத்தவரை, நாடாளுமன்ற வரப்பிரசாதம் என்பது வெறுமனே பேச்சளவில் உள்ளதையே காணமுடிகிறது. பொதுமக்களின் உண்மையான பிரச்சினைகளுக்காக, தமது வரப்பிரசாரத்தை, தமிழ் முஸ்லிம் நாடாளுமன்ற உறுப்பினர்களில் பெரும்பாலானோர் பயன்படுத்துவதில்லை.
சிங்கள நாடாளுமன்ற உறுப்பினர்களை பொறுத்தவரையில் அவர்கள், தமது தொகுதி மக்களின் பிரச்சினைகளை அல்லது நாட்டின் முக்கிய பிரச்சினைகள் தொடா்பில் நாடாளுமன்றத்தை பயன்படுத்திக் கொள்கின்றனர்.
எனினும் தமிழ் முஸ்லிம் நாடாளுமன்ற உறுப்பினர்களில் சிலர் மாத்திரமே அதனை பயன்படுத்துகின்றனர் என்பது வருந்தத்தக்க விடயமாகும். இதேவேளை இந்த நாடாளுமன்ற வரப்பிரசாதத்தை எத்தனை பேர் முறையாக பயன்படுத்துகின்றனர் என்பதும் தற்போது விவாதத்துக்குரிய விடயமாக மாறியுள்ளது.
இதனை தவிர, நாட்டின் உயர் சபையாக கருதப்படும் நாடாளுமன்றத்தில் ஒழுக்கம் எவ்வாறு கடைப்பிடிக்கப்படுகிறது என்பதும் ஆராயவேண்டிய விடயமாக உள்ளது. இலங்கையில் தற்போது 2022ஆம் ஆண்டுக்கான பாதீட்டு விவாதங்கள் நாடாளுமன்றத்தில் இடம்பெற்று வருகின்றன.
இதன்போது நாள்தோறும் ஆளும் கட்சிக்கும் எதிர்கட்சிக்கும் இடையில் வாத விவாதங்கள் இடம்பெறுகின்றன. எனினும் அவை சமூகத்துக்கு அல்லது நாட்டுக்கு பயன் உள்ள வகையில் அமைகிறதா? என்பதை ஆராய்ந்தால், இல்லை என்றே கூறமுடியும்.
அரசாங்க கட்சி தவறு இழைத்தது என்று சுட்டிக்காட்டும் போது அதனை ஆராய்ந்து விட்ட தவறை திருத்திக்கொள்ளும் பக்குவம் அரசாங்க கட்சிக்கு இல்லை. அதேபோன்று நாடு அல்லது சமூகம் என்ற அடிப்படையில் அரசாங்கம் ஏதாவது தவறு இழைக்கும்போது அதனை சுட்டிக்காட்டி ஆரம்பத்திலேயே பாரிய பிரச்சினைகளுக்கு தீர்வுக்காணும் முயற்சிகளுக்காக எதிர்கட்சியும் ஜனநாயக ரீதியில் தமது அழுத்தங்களை பிரயோகிப்பதில்லை. மறுபுறத்தில் ஒழுக்கம் என்பது நாடாளுமன்றத்தில் கடைபிடிக்கப்படுகிறதா? என்பதை நாள் தோறும் நாடாளுமன்ற நிகழ்வுகளை பார்த்துக் கொண்டிருப்போர் காணக்கூடியதாக இருக்கும்.
தகாத வார்த்தைப் பிரயோகங்கள், சமூகத்துக்கு முன்னுதாரணங்களாக எடுத்துக்கொள்ள முடியாத விடயங்களை நாடாளுமன்றத்தில் பார்க்கக்கூடியதாக உள்ளது. எனவே ஜனநாயகத்தின் பால் இந்த விடயங்கள் சாிசெய்யப்பட வேண்டும்.
நாடாளுமன்றம், சட்டங்களை இயற்றும் சபைகளாக செயற்படும் அதேநேரம் சமூகத்துக்கு முன்னுதாரணமான நிறுவனமாகவும் செயற்படுவது அவசியமாகும். இதன்போது எதிர்கால சமூகத்துக்கு நாடாளுமன்றம் என்பதன் முக்கியத்துவத்தை உணர்த்த முடியும்.