மரக்கறிகளின் விலையுயா்வு, மூன்று மாதங்களுக்குள் இயல்புக்கு வரும் - எதிா்பாா்க்கும் பசில் ராஜபக்ச
2022ஆம் ஆண்டுக்கான பாதீட்டில் ஒரே நாடு என்ற அடிப்படையில் வடக்குகிழக்குக்கும் ஏனைய பகுதிகளை போன்று நிதியொதுக்கீடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக நிதியமைச்சர் பசில் ராஜபக்ச தெரிவித்துள்ளார்
பாதீட்டின் இரண்டாம் வாசிப்புக்கான வாக்கெடுப்புக்கு முன்னர், விவாதத்துக்கு பதிலளித்து உரையாற்றியபோதே பசில் ராஜபக்ச இதனை குறிப்பிட்டார்.
தமது பாதீட்டில் கொள்கை தொடர்பான யோசனைகள் சமா்ப்பிக்கப்பட்டுள்ளன. இந்தநிலையில் விவாதத்தின்போது முன்வைக்கப்பட்ட யோசனைகள் தொடர்பில் கவனம் செலுத்தப்படும் என்று அவர் குறிப்பிட்டார்.
அரச சேவையின் சம்பள முரண்பாடுகளை களைந்துப் புதிய திட்டம் ஒன்று தேசிய சம்பள ஆணைக்குழுவிடம் சமா்ப்பிக்கப்படும்.
அத்துடன் சுகாதார துறையில் சம்பள முரண்பாடுகள் தீர்க்கப்படும் என்று பசில் ராஜபக்ச குறிப்பிட்டார்
மழை காரணமாக ஏற்பட்டுள்ள மரக்கறிகளின் மற்றும் அத்தியாவசிய பொருட்களின் விலை உயா்வு, அடுத்த மூன்று மாதங்களில் இயல்பு வரும் என்று எதிா்பாா்க்கப்படுவதாக பசில் தெரிவித்தார்.
டித்வா புயலின் பின் முக்கியத்துவம் பெறப்போகும் பலாலி விமான நிலையம் 5 மணி நேரம் முன்
விரைவில் முடிவுக்கு வரும் பூங்காற்று திரும்புமா சீரியலின் கிளைமேக்ஸ் காட்சியின் போட்டோஸ்... Cineulagam
அமெரிக்க பாணியில் பாதுகாப்பு கொள்கைகளை கடைப்பிடிக்க வலியுறுத்தும் கனடாவின் இரும்பு மனிதன் News Lankasri
என் வாழ்க்கையில் வில்லியாகிவிட்டீர்கள்... அம்மா குறித்து ஆர்த்தி ரவி பகிர்ந்த உருக்கமான பதிவு! Manithan
முதலாளிகளாகும் அதிர்ஷ்டம் கொண்டவர்கள் இந்த மாதத்தில் பிறந்தவர்கள் தானாம்... ஏன்னு தெரியுமா? Manithan