நாடாளுமன்றத் தேர்தல் அறிவிப்பு வந்தால் நடக்கப்போகும் கட்சித் தாவல் தொடர்பில் வெளியான தகவல்
ஜனாதிபதித் தேர்தலுக்கு முன் நாடாளுமன்றம் கலைக்கப்பட்டு பொதுத்தேர்தல் அறிவிப்பு வந்தால் தற்போதைய ஆளும் தரப்பிலிருந்து சஜித் (Sajith Premadasa) தலைமையிலான கூட்டணியில் 45 பேர் இணைவார்கள் என செய்திகள் வெளியாகியுள்ளன.
நாடாளுமன்றத் தேர்தலில் ராஜபக்சக்களின் மொட்டுக் கூட்டணியில் போட்டியிட்டால் தோல்வி கிடைக்கும் என்ற அச்சம் காரணமாகவே அவர்கள் சஜித் கூட்டணியில் இணைவார்கள் என்று தெரிவிக்கப்படுகின்றது.
ஜனாதிபதித் தேர்தல்
இவ்வாறு இணையும் அந்த 45 பேரில் தற்போதைய அமைச்சர்கள், இராஜாங்க அமைச்சர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஆகியோர் அடங்குவார்கள் என்பதுடன் அதற்கான கலந்துரையாடல்களும் தற்போது திரைமறைவில் இடம்பெற்று வருவதாக கூறப்படுகின்றது.
எனினும், முதலில் ஜனாதிபதித் தேர்தல் நடைபெற்றால் கள நிலைமை மாறும் என்றும் தெரிவிக்கப்படுகின்றது.
அத்துடன் நாடாளுமன்றத் தேர்தல் அல்லாமல் முதலில் ஜனாதிபதித் தேர்தல் அறிவிப்பு வந்தால் சஜித்தின் ஐக்கிய மக்கள் சக்தியில் இருந்து பல நாடாளுமன்ற உறுப்பினர்கள், ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவுடன் (Ranil Wickremesinghe) இணைவார்கள் என்று கூறப்படுகின்றது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |

பிரியங்கா தேஷ்பாண்டே திருமணத்தில் கலந்துகொண்ட விஜய் டிவி பிரபலங்கள்.. யார் யார் தெரியுமா, இதோ பாருங்க Cineulagam

Optical illusion: படத்தில் '44' மற்றும் '33' என்ற மாறுபட்ட இலக்கங்களில் '88' எங்கே மறைந்துள்ளது? Manithan

தமிழ்நாட்டில் வசூல் வேட்டையாடி வரும் குட் பேட் அக்லி.. 7 நாட்களில் எவ்வளவு வசூல் தெரியுமா Cineulagam
