சஜித்தை புறந்தள்ளி ரணிலுடன் இணையவுள்ள நாடாளுமன்ற உறுப்பினர்கள்
ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவர் சஜித் பிரேமதாசவை (Sajith Premadasa) தவிர்த்து ஐக்கிய தேசியக் கட்சியுடன், ஏராளமான ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் கூட்டணி அமைப்பார்கள் என்று முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ராஜித சேனாரத்ன தெரிவித்துள்ளார்.
சஜித் பிரேமதாச, ஐக்கிய தேசிய கட்சியுடன் கூட்டணியில் ஆர்வம் காட்டவில்லை என்று தெரிகிறது.
கூட்டணி பேச்சுவார்த்தை
இந்தநிலையில், கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்கள், ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவரை கைவிட்டு கூட்டணியில் சேர வாய்ப்புள்ளது" என்று சேனாரத்ன ஊடகங்களுக்கு தெரிவித்துள்ளார்.

எனினும், இதற்கு பதிலளிக்கும் விதமாக, கருத்துரைத்துள்ள, ஐக்கிய மக்கள் சக்தியின் பொதுச் செயலாளர் ரஞ்சித் மத்தும பண்டார, பிரேமதாச ஒருபோதும் ஐக்கிய தேசியக் கட்சியுடனான பேச்சுவார்த்தையை நிறுத்த விரும்பவில்லை என்று கூறியுள்ளார்.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
18 ஆண்டுகள் கழித்து ராகு-சூரிய சேர்க்கை: அடுத்த ஒரு மாதத்ததுக்கு இந்த 4 ராசிகளுக்கு பணமழை தான்! Manithan
12 ஆண்டுகள் காத்திருப்புக்கு பின் முதல் வெற்றி: விடைபெற்ற நேபாளம்..உருக்கத்துடன் பேசிய கேப்டன் News Lankasri
நிலா-சோழனுக்கு கிடைத்த உயில், ஆனால் அதில் இருந்தது என்ன தெரியுமா?... அய்யனார் துணை எபிசோட் Cineulagam