இன்று சரித்திரம் படைக்கப்போகும் இந்திய வீரர் சூர்யவன்ஷி..!
இந்திய கிரிக்கெட் அணியின் அயர்லாந்து சுற்றுப்பயணத்தின் ஒரு பகுதியாக நடைபெறும் இரண்டு போட்டிகள் கொண்ட டி20 தொடரின் முதல் போட்டியில் இந்திய கிரிக்கட் வீரர் வைபவ் சூர்யவன்ஷி விளையாட போகின்றார் என்ற தகவல் சமூக வலைத்தளங்களில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இந்த போட்டி இன்று(26.06.2026) பெல்ஃபாஸ்டில் இடம்பெறவுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
வரலாற்று சாதனை படைக்கும் வாய்ப்பு
இந்திய நேரப்படி மாலை 6:00 மணிக்குத் தொடங்கும் இந்தப் போட்டி, உலக கிரிக்கெட் சமூகம் முழுவதாலும் ஆவலுடன் எதிர்பார்க்கப்படும் போட்டியாக மாறியுள்ளது.
இதற்கு முக்கிய காரணம், இளம் இந்திய பேட்ஸ்மேன் வைபவ் சூர்யவன்ஷிக்கு இந்தப் போட்டியில், தனது சர்வதேச அறிமுகத்தைப் பெறுவதற்கான மிக நல்ல வாய்ப்பு இருப்பது தான்.
திறமையான சூர்யவன்ஷி இன்று களமிறங்கினால், அவர் சர்வதேச கிரிக்கெட்டின் சரித்திரப் புத்தகங்களை மீண்டும் இடம்பிடிப்பார் என ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர்.

இந்நிலையில், தற்போது 15 வயது மற்றும் 91 நாட்கள் ஆன சூர்யவன்ஷி, இன்றைய போட்டியில் விளையாடினால், ஐசிசியின் முழு உறுப்பினர் நாட்டிற்காக ஆடவர் டி20 சர்வதேசப் போட்டியில் விளையாடிய மிக இளைய வீரர் என்ற வரலாற்றுச் சாதனையை அவர் படைப்பார் என்றும் எதிர்ப்பார்க்கப்படுகின்றது.
இதற்கு முந்தைய சாதனையை அயர்லாந்தின் ஜோஷ் லிட்டில் வைத்திருந்தார், அவர் தனது 16 வயது மற்றும் 309 நாட்களில் டி20 சர்வதேசப் போட்டியில் அறிமுகமானார்.
சூர்யவன்ஷி இன்று அறிமுகமானால், சர்வதேசப் போட்டியில் இந்தியாவுக்காக விளையாடும் மிக இளைய வீரர் என்ற பெருமையையும் அவர் பெறுவார் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அடுத்த சச்சினாக உருவெடுக்கும் இந்திய வீரர்
இதற்கு முந்தைய சாதனையை உலகத்தரம் வாய்ந்த பேட்ஸ்மேன் சச்சின் டெண்டுல்கர் வைத்திருந்தார். 1989-ல் பாகிஸ்தானுக்கு எதிராக தனது டெஸ்ட் போட்டியில் அறிமுகமானபோது சச்சினுக்கு 16 வயது மற்றும் 205 நாட்கள் ஆகியிருந்தது, மேலும் 33 நாட்களுக்குப் பிறகு அவர் ஒருநாள் போட்டிக்கான தொப்பியையும் வென்றார்.

ஆண்கள் சர்வதேச கிரிக்கெட் வரலாற்றில் மிக இளைய வீரர் பாகிஸ்தானின் ஹசன் ரசா ஆவார். 1996ஆம் ஆண்டில் ஜிம்பாப்வேக்கு எதிராக தனது டெஸ்ட் போட்டியில் அறிமுகமானபோது, அவருக்கு 14 வயது மற்றும் 227 நாட்கள் மட்டுமே ஆகியிருந்தது.
இருப்பினும், சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐசிசி) 2020-ல் ஒரு வீரர் சர்வதேசப் போட்டிகளில் விளையாடுவதற்கான குறைந்தபட்ச வயதை 15 -ஆக நிர்ணயித்துள்ளது.