யாழ். வைத்தியசாலைக்குள் அர்ச்சுனாவின் அட்டகாசம் : வைத்தியர் சத்தியமூர்த்தியின் எச்சரிக்கை
நாடாளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனா மீண்டும் யாழ். போதனா வைத்தியசாலைக்கு குழப்பம் விளைவிக்க வருவாரெனின், வாசலிலேயே வைத்து பாதுகாப்பு உத்தியோகத்தர்களால் அவர் பொலிஸாரிடம் ஒப்படைக்கப்படுவார் என்று யாழ். போதானா வைத்தியசாலையின் பணிப்பாளர் வைத்தியர் தங்கமுத்து சத்தியமூர்த்தி தெரிவித்துள்ளார்.
இன்றையதினம் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
தொடர்ந்தும் தெரிவிக்கையில்,
யாழ். போதனா வைத்தியசாலைக்கு வருகைத் தந்த நாடாளுமன்ற உறுப்பினர் அர்ச்சுனா, தான் தற்போது ஒரு நாடாளுமன்ற உறுப்பினர் என்றும், தன்னை “சேர்” என்று அழைக்குமாறும் கூறி எம்மோடு முரண்பட்டார்.
அவரை சேர் என்று அழைக்க முடியாது என்று பதிலளித்ததற்கு, என்னை யாழ். போதனா வைத்தியசாலையின் பணிப்பாளர் பதவியில் இருந்து அகற்றுவேன் எனவும், நாடாளுமன்றத்திற்கு அழைத்து கேள்வி கேட்பேன் என்றும் கூறினார்.
அத்தோடு, யாழ். போதனா வைத்தியசாலைக்குள் உள்நுழைந்து நாடாளுமன்ற உறுப்பினர் அர்ச்சுனா குழப்பம் விளைவிப்பதற்கு இடமளிக்க முடியாது.
மீண்டும் ஒருமுறை அவர் யாழ். போதனா வைத்தியசாலைக்கு குழப்பம் விளைவிக்க முற்படுவராயின் அவர் வாசலிலேயே வைத்து தடுத்து நிறுத்தப்பட்டு, பாதுகாப்பு உத்தியோகத்தரால் பொலிஸாரிடம் ஒப்படைக்கப்படுவார் என குறிப்பிட்டுள்ளார்.
மேலதிக தகவல் - தீபன்

இந்தியாவின் நட்பு நாட்டிற்கு எதிராக சீனாவின் 24 JF-17 போர் விமானங்களை வாங்கும் பாகிஸ்தான் நட்பு நாடு News Lankasri

இந்தியாவுடனான பதற்றத்திற்கு மத்தியில் ரஷ்யாவுடன் பாகிஸ்தான் ஒப்பந்தம் - வெளிவந்த உண்மை News Lankasri

மறைந்த தந்தையின் கனவை நிறைவேற்ற முழுநேர வேலையுடன் UPSC தேர்வில் தேர்ச்சி பெற்ற கேரள பெண் News Lankasri
