இலங்கையின் சாலைப் பாதுகாப்புச் சட்டம்.. முக்கிய இரண்டு ஒழுங்குவிதிகள் குறித்து குகதாசன் எம்பி கருத்து
இலங்கையின் சாலைப் பாதுகாப்புச் சட்டக் கட்டமைப்பு ஆனது, மோட்டார் போக்குவரத்துச் சட்டத்தின் கீழ் அத்தியாயம் 203இல், குறிப்பிட்ட இரண்டு ஒழுங்குவிதிகளை நாடாளுமன்ற ஒப்புதலுக்காக முன்வைப்பதன் மூலம் ஒரு குறிப்பிடத்தக்க மறுசீரமைப்புக்கு உள்ளாகிறது என நாடாளுமன்ற உறுப்பினர் சண்முகம் குகதாசன் குறிப்பிட்டார்.
இது தொடர்பில் அவர் நேற்று நாடாளுமன்றத்தில் உரையாற்றும் போது, மோட்டார் போக்குவரத்து விரைவு நெடுஞ்சாலை ஒழுங்குவிதிகள் மற்றும் மோட்டார் போக்குவரத்து போதைப்பொருள் ஒழுங்குவிதிகள் ஆகிய இந்த விதிமுறைகள், வளர்ந்து வரும் போக்குவரத்து அபாயங்களுக்கு அரசின் விடையாக அமைகின்றன.
பல பதிற்றாண்டுகளாக, இலங்கையின் சாலைப் பாதுகாப்பு கட்டமைப்பானது; விரிவான நடைமுறைகள் இல்லாத அடிப்படைச் சட்டங்களால் முடக்கப் பட்டிருந்தது.
கருவிக் கட்டளைகள்
உலக சுகாதார நிறுவனத்தின் அறிக்கையின்படி, 2025 ஆம் ஆண்டு இலங்கையில் சாலை விபத்து இறப்புகள் நூறாயிரம் மக்கள் தொகைக்கு 15.2 ஆக இருந்தது.
[M2PR5BOஸ
இது ஆசிய-பசிபிக் சராசரியை விட கூடுதலாக இருப்பதால், சான்றுகள் அடிப்படையிலான தலையீடுகள் கட்டாயமாகின்றன. 2025 ஆம் ஆண்டின் திருத்தங்கள் வெறும் கருவிக் கட்டளைகள் மட்டுமல்ல.
அவை போதைப்பொருள் பாவனையாளரைக் கண்டறிதல் மற்றும் விரைவுநெடுஞ்சாலைப் பாதுகாப்பில் நீண்டகாலமாக இருந்த "நடைமுறை வெற்றிடத்தை" நிரப்பும் கருவிகளாகும்.
புதிய ஒழுங்குவிதிகளின் முதன்மை மற்றும் சிறப்புக் கூறுகள்; முதலாவது ஒழுங்குவிதியான மோட்டார் போக்குவரத்து விரைவுநெடுஞ்சாலை ஒழுங்குவிதிகள், விரைவுநெடுஞ்சாலை வலையமைப்பைப் பயன்படுத்தும் வாகனங்களுக்கான பாதுகாப்பு இருக்கைப் பட்டித் (seat belt) தேவைகளைக் கணிசமாக விரிவு படுத்துகிறது.
புதிய ஒழுங்குவிதி 8A இன் படி, விரைவு நெடுஞ்சாலையில் வாகனம் இயங்கும் பொழுது; ஓட்டுநர் மற்றும் அனைத்து பயணிகளும் பாதுகாப்பு இருக்கைப் பட்டியை அணிந்திருக்க வேண்டும்" என குறிப்பிட்டார்.
பட்டப்பகலில் மாத்தறையை உறைய வைத்த துப்பாக்கிச்சூடு - பொலிஸ் கண்காணிப்பில் இருந்தவருக்கு நேர்ந்துள்ள பரிதாபம்