பார்க்கிங் டிக்கெட்டுக்கான கட்டண அறவீடு குறித்து அரசாங்கம் வழங்கியுள்ள தகவல்
பொது வாகன நிறுத்துமிடங்களில், வாகனங்களை நிறுத்தி 10 நிமிடங்கள் ஆனதற்கு பிறகு தான் கட்டணம் வசூலிக்கப்படும் என்று கொழும்பு மாநகர சபை (CMC) தெரிவித்துள்ளது.
இந்த தகவலை கொழும்பு மாநகர ஆணையர் பாலித நாணயக்கார வழங்கியுள்ளார்.
அதற்கமைய, பொது வாகன நிறுத்துமிடங்களில் வாகனத்தை நிறுத்தியதும் உடனடியாக கட்டணம் செலுத்த வேண்டும் என்று எந்த சட்டமும் இல்லை என்று அவர் தெரிவித்துள்ளார்.
முதல் 10 நிமிடங்கள்
மேலும், "வாகனம் தரிப்பிடத்தில் இருக்கும் முதல் 10 நிமிடங்களுக்கு கட்டணம் இலவசம். வாகனம் நிறுத்தப்படும் நேரத்தை உள்ளிட்டு டிக்கெட் வழங்கப்படும் என குறிப்பிட்டுள்ளார்.

அத்துடன், நபர் ஒருவர் பத்து நிமிடங்களுக்கு மேல் வாகனத்தை நிறுத்தி இருந்தால், அவர்களிடம் 70 ரூபாய் கட்டணம் வசூலிக்கப்படும். அதற்கு மேல் பணம் பெறுவது சாத்தியமில்லை.
அதேவேளை, விடுமுறை நாட்களிலும் நாங்கள் கட்டணம் வசூலிப்பதில்லை” என கொழும்பு மாநகர ஆணையர் பாலித நாணயக்கார சுட்டிக்காட்டியுள்ளார்.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
உக்ரைனிய வான்பரப்பை சூழ்ந்த ரஷ்ய ஏவுகணைகள்: சுட்டு வீழ்த்தப்பட்ட 600 க்கும் மேற்பட்ட ட்ரோன்கள் News Lankasri
பாடகியுடன் சுற்றித்திரியும் கணவர்... பிறந்த நாளில் ஆர்த்தி ரவி உருக்கம்! வைரலாகும் புகைப்படங்கள் Manithan
இன்னும் 6 வாரங்கள்... ஐரோப்பாவின் மொத்த விமான சேவையும் ஸ்தம்பிக்கும்: வெளியான எச்சரிக்கை News Lankasri
நான் சிவனேனு தானடா இருந்தேன்: நயன்தாரா 'நார்மல் people கிடையாது' ட்ரோல் பற்றி விக்னேஷ் சிவன் விளக்கம் Cineulagam