பார்க்கிங் டிக்கெட்டுக்கான கட்டண அறவீடு குறித்து அரசாங்கம் வழங்கியுள்ள தகவல்
பொது வாகன நிறுத்துமிடங்களில், வாகனங்களை நிறுத்தி 10 நிமிடங்கள் ஆனதற்கு பிறகு தான் கட்டணம் வசூலிக்கப்படும் என்று கொழும்பு மாநகர சபை (CMC) தெரிவித்துள்ளது.
இந்த தகவலை கொழும்பு மாநகர ஆணையர் பாலித நாணயக்கார வழங்கியுள்ளார்.
அதற்கமைய, பொது வாகன நிறுத்துமிடங்களில் வாகனத்தை நிறுத்தியதும் உடனடியாக கட்டணம் செலுத்த வேண்டும் என்று எந்த சட்டமும் இல்லை என்று அவர் தெரிவித்துள்ளார்.
முதல் 10 நிமிடங்கள்
மேலும், "வாகனம் தரிப்பிடத்தில் இருக்கும் முதல் 10 நிமிடங்களுக்கு கட்டணம் இலவசம். வாகனம் நிறுத்தப்படும் நேரத்தை உள்ளிட்டு டிக்கெட் வழங்கப்படும் என குறிப்பிட்டுள்ளார்.

அத்துடன், நபர் ஒருவர் பத்து நிமிடங்களுக்கு மேல் வாகனத்தை நிறுத்தி இருந்தால், அவர்களிடம் 70 ரூபாய் கட்டணம் வசூலிக்கப்படும். அதற்கு மேல் பணம் பெறுவது சாத்தியமில்லை.
அதேவேளை, விடுமுறை நாட்களிலும் நாங்கள் கட்டணம் வசூலிப்பதில்லை” என கொழும்பு மாநகர ஆணையர் பாலித நாணயக்கார சுட்டிக்காட்டியுள்ளார்.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
ஈரான் போர்.. துபாயில் சிக்கி தவிக்கும் இந்திய நடிகைகள்! பிரதமர் மோடிக்கு உருக்கமான வேண்டுகோள் Cineulagam
ஐக்கிய அரபு அமீரகம் மீது பாய்ந்த ஈரானின் 137 ஏவுகணைகள், 209 ட்ரோன்கள்: மத்திய கிழக்கில் பதற்றம் News Lankasri
ஈரான் உச்ச தலைவர் அலி காமெனி குடும்பத்துடன் கொல்லப்பட்டார்: ஈரான் அரசு ஊடகம் அறிவிப்பு News Lankasri
உங்க குழந்தை என் வயிற்றில் வளர்கிறது.. சரவணனிடம் கூறிய தங்கமயில்.. பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் அடுத்து நடக்கவிருப்பது இதுதான் Cineulagam