சட்டத்தரணிகள் சங்கம் மீது அதிருப்தி வெளியிட்டுள்ள அகிம்சா
சட்டமா அதிபரின் முடிவுகளை மறுபரிசீலனை செய்வது குறித்து இலங்கை சட்டத்தரணிகள் சங்கம் எடுத்துள்ள நிலைப்பாடு குறித்து, கொலை செய்யப்பட்ட ஊடகவியலாளர் லசந்த விக்ரமதுங்கவின் மகள் அகிம்சா விக்ரமதுங்க, அதிருப்தி வெளியிட்டுள்ளார்.
இலங்கை சட்டத்தரணிகள் சங்கத்தின் தலைவர் அனுரா பி.மெத்தேகொடவுக்கு எழுதிய கடிதத்தில், தனது அதிருப்தியை அவர் வெளியிட்டுள்ளார்.
சட்டமா அதிபர் அலுவலகத்தின் சுதந்திரம்
குற்றத்தால் பாதிக்கப்பட்டவர்களின் உரிமைகளைப் பாதுகாக்கவும், இலங்கை குற்றவியல் நீதி அமைப்பின் நேர்மையைப் பாதுகாக்கவும், நடப்பு அரசாங்கம் எடுத்த நடவடிக்கைகள் குறித்து, சட்டத்தரணிகள் சங்கம், ஜனாதிபதிக்கு மறைமுக அச்சுறுத்தலை விடுத்துள்ளதாக, அகிம்சா விக்ரமதுங்க குற்றம் சுமத்தியுள்ளார்.

தனது தந்தையின் வழக்கில், சட்டமா அதிபர் அலுவலகத்தின் சுதந்திரம் அப்பட்டமாக துஷ்பிரயோகம் செய்யப்பட்டுள்ளது.
இந்தநிலையில், அவரது அலுவலகத்தின் சுதந்திரம் குறைமதிப்பிற்கு உட்படுத்தப்பட்டதாக கூறி, போராடுவதற்கான சட்டத்தரணிகள் சங்கத்தின் முடிவு பாசாங்குத்தனத்தால் நிறைந்துள்ளது என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
T20 உலக கிண்ணத்தால் ஒத்திவைக்கப்பட்ட திருமணம் - நீண்டகால தோழியை மணக்கும் குல்தீப் யாதவ் News Lankasri
பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியலில் ஏற்பட்ட திடீர் மாற்றம், மீனாவால் செம ஷாக்கில் கோமதி... என்ன பாருங்க Cineulagam
முத்துவின் வாழ்க்கையில் கிடைத்த பெரிய வாய்ப்பு, செம கோபத்தில் ரோஹினி... சிறகடிக்க ஆசை சீரியல் Cineulagam
வீட்டை அடமானம் வைப்பது தெரிந்ததும் வானதி செய்த விஷயம், அடுத்த பிரச்சனை... அய்யனார் துணை சீரியல் எபிசோட் Cineulagam