விடுதலைப் புலிகளின் தலைவரை அழைத்துச் செல்ல முயற்சித்த அமெரிக்கா - வெளிவரும் தகவல்
அமெரிக்கா உள்ளிட்ட சர்வதேச நாடுகள், இறுதி யுத்தக் காலத்தில் யுத்தத்தை நிறுத்தி தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரனை அழைத்துச் செல்ல முயற்சித்த போது அதற்கு இலங்கை அரசு அனுமதிக்காமையின் காரணமாகவே ஐ.நா மனித உரிமைகள் பேரவையில் இலங்கைக்கு எதிராக சர்வதேச நாடுகள் செயற்படுவதாக அரச தரப்பு நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.பி.திஸாநாயக்க (S.B.Dissanayake) தெரிவித்துள்ளார்.
நாடாளுமன்றில் நேற்று இடம்பெற்ற பெற்றோலிய வளங்கள் சட்டமூலம் தொடர்பான விவாதத்தில் உரையாற்றும் போதே அவர் இந்த விடயத்தை குறிப்பிட்டுள்ளார்.
அத்துடன், அமெரிக்கா உள்ளிட்ட சர்வதேச நாடுகள் இறுதி யுத்தக் காலத்தில் பிரபாகரனை அழைத்து செல்ல முயற்சித்தார்கள், யுத்தத்தை நிறுத்தவும் பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டார்கள் என கூறியுள்ளார்.
இது தொடர்பான விரிவான தகவல்களுடன் வருகிறது இன்றைய தினத்திற்கான பத்திரிகைகளின் கண்ணோட்டம்,

Numerology : இந்த தேதியில் பிறந்த பெண்ணை திருமணம் செய்தால் ராஜயோகம் உறுதி... நீங்க பிறந்த தேதி? Manithan

ஸ்ருதியிடம் நன்றாக வாங்கி கட்டிக்கொண்ட ரோஹினி, என்ன இப்படி சொல்லிட்டார்.. சிறகடிக்க ஆசை புரொமோ Cineulagam
